திமுக அரசை இழிவு படுத்திய பாதிரியாரை பிணையில் விடுவிக்க வன்னியரசு வலியுறுத்தல்.! இது என்ன கூட்டணி தர்மம்..

0
Follow on Google News

சமீபத்தில் மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா பேசிய பேச்சுக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, அதில். திமுக அமைச்சர் சேகர் பாபு. , அமைச்சர் மனோ தங்கராஜ் ஒன்று சொல்கிறேன் நீங்கள் எத்தனை கோவிலுக்கு குடமுழுக்கு கொடுத்தாலும், எத்தனை கோவிலுக்கு துணி உடுத்தாமல் சாமி நீங்கள் கும்பிட்டாலும், ஒருத்தன் கூட உங்களுக்கு ஓட்டு போட மாட்டான். மண்டைக்காடு பக்தனும் உங்களுக்கு போட போடுவது கிடையாது, இந்துக்களும் உங்களுக்கு ஒட்டு போட போடுவது கிடையாது.

நீங்கள் வெற்றி பெற்றது கிறிஸ்துவ மக்களும், முஸ்லிம் மக்களும் உங்களுக்கு போட்ட பிச்சை என்பதை மறந்து விட வேண்டாம். உங்களுடைய திறமையை வைத்து நீங்கள் ஓட்டு வாங்கவில்லை. உங்களுக்கு ஓட்டு போடச் சொன்னது எங்களுடைய ஆயர்கள், கிறிஸ்தவ ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று உங்களுக்கு ஓட்டு போடச் சொன்னார்கள். பாஜக சார்பில் வெற்றி பெற்ற எம் ஆர் காந்தி செருப்பு போட மாட்டான், கேட்டால் பூமாதேவியை செருப்பு போட்டு மிதிக்க மாட்டானாம், ஆனால் நாம சூ போட்டது எதற்கு பாரதமாதா ஒரு அசிங்கம் அது நம்மை தோற்று விடக் கூடாது என்பதற்காக தான்,

மேலும் நமக்கு சொரி சிரங்கு எல்லாம் வந்து விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு இலவச செருப்பு கொடுத்துள்ளது. இந்த பூமாதேவி ரொம்ப டேஞ்சரஸான ஆளு, சொரி, சிரங்கு பிடிக்கும் அதனால செருப்பு போட்டுக்கணும். நாங்கள் இப்போது 40 சதவிகிதத்தில் இருந்து 62 சதவீதமாக வந்துவிட்டோம், இன்னும் சில காலங்களில் 70 சதவீதமாக வந்து விடுவோம், எங்களை யாரும் தடுக்க முடியாது. இதை எச்சரிக்கையாக இந்து சகோதரர்களுக்கு சொல்ல விரும்புகின்றேன்

மோடியின் கடைசி காலம் மிக மிக பரிதாபமாக இருக்கும், எழுதி வைத்துக் கொள்ளுங்கள், நாம் நம்புகின்ற கடவுள் உயிரோடு இருக்கிறார் என்றால் அமித்ஷா, மோடியை நாயும், புழுவும் சாப்பிடும் நிலையை வரலாறு காண வேண்டும். எங்கள் சாபம் உன்னை அழிக்கும் என எச்சரித்து இருந்தார். இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு நடவடிக்கை எடுக்க தமிழகம் முழுவம் புகார் கொடுக்கப்பட்ட நிலையில். தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்து சிறையில் அடைத்தது.

இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த வன்னியரசு கைது செய்யப்பட்டுள்ள ஜார்ஜ் பொன்னையாவை பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார், அவர் தனது டிவீட்டர் பக்கத்தில். கைது செய்யப்பட்டுள்ள அருட்தந்தைஜார்ஜ்பொன்னையா அவர்களுக்கு ஏற்கனவே, இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு செயற்கைஇதயமுடுக்கி (pace maker) பொருத்தப்பட்டுள்ளது.

வயதையும் உடல்நலத்தையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு அருட்தந்தையை பிணையில் விடுவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். வன்னியரசின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுக அமைச்சர் மற்றும் திமுக அரசை இழிவு படுத்தும் விதத்தில் பேசிய ஜார்ஜ் பொன்னையாவை விடுதலை செய்ய வேண்டும் என வன்னியரசு தெரிவிப்பது திமுக கூட்டணி தர்மத்துக்கு எதிரானது என விமர்சனம் எழுந்துள்ளது.