அண்ணாமலைக்கு முட்டு கொடுத்து முதுகில் குத்தும் துரோகிகள்… யார் அந்த கட்டப்பா தெரியுமா.?

0
Follow on Google News

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மிக சிறப்பாக செயல்படுகிறார், அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர், இது போன்ற தலைவர் பாஜகவுக்கு கிடைத்தது பொக்கிஷம் என அண்ணாமலை ஒவ்வொரு நடவடிக்கைகளை புகழ் பாடிக்கொண்டே, ஒரு கும்பல் அண்ணாமலை முதுகில் குத்தி வரும் சம்பவம் தற்பொழுது அரங்கேறி வருகிறது.

இந்த கூட்டத்தின் தலைமை பொறுப்பை ஏற்று வழி நடத்துவது, தமிழக ஆட்சி மாற்றத்திற்கு பிறகு குண்டாஸில் சிறை சென்று விடுதலையான ஒருவர்தான் என்று கூறப்படுகிறது. இவர் தன்னை அரசியல் விமர்சகர் என்று காட்டி கொண்டு பொதுவாழ்க்கையில் இருக்கும் பெண்களை மிக கீழ்த்தரமாக இதற்கு முன்பு விமர்சனம் செய்து வந்தவர்.

தன்னை திமுக எதிர்ப்பாளர் என காட்டி கொள்ளும் இந்த நபர், திமுக எம்பி கனிமொழிக்கு ஆதரவாக செயல்படுவார், அதே போன்று இவர் கடந்த காலங்களில் திமுக தவிர்த்து அணைத்து காட்சிகளை ஆதரித்துள்ளார், அதே போன்று பாஜக உட்பட பல காட்சிகளை விமர்சனம் செய்துள்ள இவர் பணம் கொடுத்தால் முட்டு கொடுக்கும் நபர் தான் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமி அணியினருக்கு முட்டு கொடுத்து வரும் அந்த நபர் தலைமையின் கீழ் இயக்கும் கும்பலை சேர்ந்தவர்கள், ஆரம்ப கட்டத்தில் தங்களை ஒரு சங்கியாக காட்டிக் கொண்டு, பாஜகவை புகழ் பாடுவது குறிப்பாக அண்ணாமலையை அளவுக்கு அதிகமாக புகழ் பாடி தங்களை பிரபலப்படுத்திக் கொண்டு, பின்பு பாஜகவுக்கு எதிராக பல உள்ளடி வேலைகளை தற்பொழுது செய்து வருகின்றார்கள்.

இந்த கும்பலில் இருக்கும் யூ டியூபர் ஒருவர், தன்னை ஒரு பாஜகவின் ஆதரவாளராக வெளிப்படுத்தி கொண்டு,குறிபாக பாஜக தலைவர் அண்ணாமலை தனக்கு நெருக்கமானர் என்கிற ஒரு பிம்பத்தை உருவாக்கிய அந்த யூ டியூபர், கோவில் பெயரை பயன்படுத்தி பல லட்சம் மோசடி செய்து சாமிக்கே விபூதி அடித்த புகாரில் கைது செய்யப்பட்டு பாஜக மற்றும் அதன் தலைவருக்கு மிக பெரிய அவ பெயரை பெற்று தந்தவர்.

இந்த நபர் சமீபத்தில் எடப்பாடி அணியினருக்கு புகழ் தொடங்கினார், ஆனால் சமூக வலைதள சங்கிகள் ஒன்றிணைந்து எடப்பாடி அணியினரிடம் விலை போய் விட்டார் இந்த யூ டியூபர் என விமர்சனம் செய்ய, அய்யோ பங்கு மாட்டிகிட்டோம் பங்கு என அந்தர் பல்டி அடித்து எடப்பாடி அணியினருக்கு முட்டு கொடுப்பதை நிறுத்திவிட்டு மீண்டும் அண்ணாமலை புகழ் பாடி வருகிறார் அந்த கோவில் வசூல் மோசடியில் சிக்கிய யூ டியூபர்.

இந்த நிலையில் கட்சியில் தங்களை இணைத்து கொண்டு களத்தில் வேலை செய்யாமல், பாஜக மற்றும் அதன் தலைவர் அண்ணாமலை பெயரை பயன்படுத்தி கொண்டு தங்களை பிரபடுத்தும் நபர்கள், பின்பு யார் பணம் கொடுத்தாலும் அவர்களுக்கு முட்டு கொடுக்க சென்று விடுகிறார்கள், இது போன்ற நபர்களுக்கு தற்பொழுது எடப்பாடி அணியினர் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளா அசைமென்ட் என்னவென்றால்.

அண்ணாமலைக்கு ஆதரவாக பேசி, தமிழக பாஜகவை மட்டம் தட்டி, எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்துவது, மேலும் எடப்பாடி பழனிசாமி கொடுக்கும் தொகுதிகளை வாங்கி கொண்டு பாஜக கூட்டணியில் இருக்க வேண்டும் இல்லையென்றால் பாஜகவுக்கு இழப்பு என்கிற ஒரு பிம்பம் சமூக வலைதளத்தில் இந்த கும்பல் கட்டியமைக்கும் வேலைகளில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுபோன்ற முதுகில் குத்தும் கட்டப்பாகளை பாஜக தலைமை முக்கியத்துவம் கொடுக்காமல், பாஜக ஐடி பிரிவு என்பதை யாரும் அறியாத காலத்தில் கூட சமூக வலைதளத்தில் பாஜகவுக்கு ஆதரவாக போராடிய பலர் இன்றும் கட்சியில் சமூக வலைதளத்தில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள் அவர்களை கண்டறிந்து பாஜக தலைமை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிறது பாஜக வட்டாரங்கள்.

பாஜகவில் விஸ்வரூபம் எடுக்கும் ஹனி ட்ராப் விவகாரம்… அண்ணாமலையின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன.?