தம்பியை கத்தியால் குத்திக் கொன்ற அண்ணன். அண்ணியிடம் பேசியதால் நடந்த விபரீதம்…

0
Follow on Google News

திருச்சியில் அண்ணன் மனைவியுடன் அடிக்கடி பேசிய கொண்டு இருந்த தம்பியை அண்ணன் கத்தியால் குத்தி கொலை செய்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டம், பிள்ளைமாநகரை பகுதியை சேர்ந்த 29வயதுடைய அருண் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

இவரின் மனைவி பெயர் வெற்றிச்செல்வி. அருனின் பெரியப்பா உறவுமுறையில் ஜாக்கிசான் (27) என்ற தம்பி ஒருவர் இருக்கிறார். ஜாக்சான் இவரது மனைவி வெற்றிச்செல்வியிடம் அடிக்கடி நேரிலும் செல் போனிலும் அடிக்கடி பேசி வந்துள்ளார். இவர்கள் அடிக்கடி பேசி கொள்வது அருணுக்கு தெரிந்தது. சந்தேகம் அதிகரித்து வந்துள்ளது. இதைத்தொடர்ந்து மனைவியையும் ஜாக்சானையும் குறித்து கண்டித்துள்ளார்.

ஆனால் மீண்டும் இவர்கள் சில தினங்களுக்கு முன்பு மார்க்கெட் பகுதியில் ஜாக்சன் அவரது அண்ணி வெற்றிச்செல்வியுடன் பேசிக் கொண்டு இருக்க, அப்போது அந்த இடத்திற்கு வந்த அருண் தனது மனைவியுடன் ஜாக்சன் பேசிக் கொண்டிருப்பதை கண்டு ஆத்திரமடைந்து உள்ளார். அருணுக்கும் தம்பி ஜாக்சனுக்கும் வாக்குவாதம் நடைபெற்றது பிறகு சண்டையாக மாறியது. அருண் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தம்பி ஜாக்சனை சரமாரியாக குத்தினார். இதில் ஜாக்சன் துடிதுடிக்க ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆத்திரத்தில் தம்பியை குத்திவிட்டு அருண் தப்பியோடிவிட்டார். சம்பவ இடத்துக்கு தகவல் அறிந்து வந்த காந்தி மார்க்கெட் போலீசார் ஜாக்சனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய அருணை தீவிரமாக தேடி வருகின்றனர்.