விபசார கும்பலில் சிக்கிய இளம் பெண்ணை போலீசார் மீட்ட சம்பவம்… மதுரையில் நடந்த பரபரப்பு சம்பவம் …

0
Follow on Google News

மதுரை அருகே பெற்றோர்களிடம் சண்டையிட்டு வெளியூருக்கு வேலை தேடி வந்த பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 5 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை எல்லீஸ் நகர் ஹவுசிங் போர்டு குடியிருப்பில் உள்ள வீட்டில் விபசார தொழில் நடைபெறுவதாக ரோந்து பணியில் ஈடுபட்ட மதுரை எஸ் எஸ் காலனி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து ஆள் கடத்தல், குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவர்கள் உதவியுடன் குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டிற்கு வாடிக்கையாளர் போன்ற சோதனையிட்ட போலீசார். அங்கிருந்த அழகம்மாள், இராமசாமி, ரமேஷ் , உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பலை விபசார நடைபெற்ற சம்பவ இடத்திலேயே கையும் களவுமாக பிடித்தனர்.

இதனை தொடர்ந்து அந்த கும்பலை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர், அப்போது தூத்துக்குடி மாவட்டத்தில் பெற்றோர்களிடம் சண்டையிட்டு வெளியூருக்கு வேலை தேடி வந்து பெண் கடந்த சில மாதங்களாக இந்த கும்பலிடம் சிக்கி இருந்தது விசாரணையில் தெரிய வந்ததை தொடர்ந்து, பாதிக்கப்பட்டிருந்த பெண்ணை போலீசார் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.