மலை அடிவாரத்தில் பத்தாம் வகுப்பு மாணவியிடம் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞரை கையும் களவுமாக பிடித்த போலீசார்.!

0
Follow on Google News

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன். அதே பகுதியில் வசித்து வந்த சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஸ்டீபனுக்கு பத்தாம் வகுப்பு சிறுமிக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஆரம்பத்தில் சிறுமியிடம் ஸ்டீபன் நன்றாக பேசி வந்துள்ளான். இவர்களின் காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய சிறுமியை கண்டித்துள்ளனர்.

திடீரென்று ஒரு நாள் பள்ளிக்குச் சென்ற‌ சிறுமி வீட்டிற்கு வரவில்லை. சிறுமியை பல இடங்களில் தேடிய பெற்றோர்கள் கடைசியில் காவல் நிலையத்துக்கு தஞ்சம் அடைந்தனர். களத்தில் இறங்கிய காவல்துறை சிறுமியைத் தேடி தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போதுதான் காவல்துறைக்கு தெரிந்தது சிறுமியை அதே பகுதியில் வசித்து வரும் ஸ்டீபன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டு ஸ்டீபனை தேட ஆரம்பித்தனர். பல இடங்களில் தேடியும் ஸ்டீபனும் சிறுமியும் கிடைக்கவில்லை. கடைசியாக நாகர்கோவில் மலை அடிவாரத்தில் ஸ்டீபனையும் சிறுமியும் கையும் களவுமாக பிடித்த காவல் துறை, சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்து ஸ்டீபனை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றது.

இவர்கள் மலையடிவாரத்தில் குடும்பமே நடத்தியுள்ளனர். காவல் நிலையத்தில் வைத்து நடைபெற்ற விசாரணையில் ஸ்டீபன் ஏற்கனவே இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி குடும்பமே நடத்தி வந்துள்ளார். தற்போது சிறுமியும் இவனின் வலையில் சிக்கியது அதிர்ச்சியன அளிக்கிறது.