தமிழ்நாட்டை சேர்ந்த 7.628 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசி.! இருவர் இறந்ததற்கு என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

கொவிட்-19 தடுப்பூசி, இம்மாதம் 16ஆம் தேதியன்று வெற்றிகரமாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது, இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கும் அண்டை நாட்டுத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இலங்கை அதிபர் கொத்தபயா ராஜபக்சே, மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சாலிஹ், பூடான் பிரதமர் டாக்டர் லோடே ஷெரிங், இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே ஆகியோர், வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில்,நாடு தழுவிய மிகப்பெரிய கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் திட்டத்தின் மூன்றாம் நாள் வெற்றிகரமாக நிறைவடைந்தது. 7,704 அமர்வுகளில் 3,81,305 பயனாளிகளுக்கு இது வரை தடுப்பு மருந்து வழங்கப்பட்டு இருக்கிறதென்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்று மாலை 5 மணி வரை தடுப்பு மருந்து பெற்றுக்கொண்ட 1,48,226 பயனாளிகளில், தமிழ்நாட்டை சேர்ந்த 7.628 பேரும் அடங்குவர்.

தடுப்பு மருந்து பெற்றுக்கொண்டவர்களில் 580 நபர்களுக்கு சிறிய அளவிலான உபாதைகள் இது வரை ஏற்பட்டுள்ளன. இவர்களில் ஏழு பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். தில்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று நபர்களில் இரண்டு பேர் வீடு திரும்பியுள்ளனர், ஒருவர் கண்காணிப்பில் உள்ளார்.

உத்தரகாண்டில் உபாதைக்கு உள்ளானவரின் உடல்நிலை சீராக உள்ளது. சத்தீஸ்கரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். கர்நாடகாவில் இருவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இது வரை இறந்துள்ள இரண்டு நபர்களில், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் இதய நோய் காரணமாக உயிரிழந்தார் எனவும், அவரது மரணத்துக்கு தடுப்பு மருந்து காரணம் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகத்தை சேர்ந்தவரின் உடற்கூறு ஆய்வு இன்று நடைபெறுகிறது.