சென்னையில் பிரபல நட்சத்திர விடுதி கழிவறையில் தொங்கவிடப்பட்டுள்ள இந்து கோவில் புகைப்படம்.! பல நாட்டவர் வந்து தங்கும் இடத்தில் இப்படியா.?

0
Follow on Google News

சென்னை பிரபல GRT Grand எனும் மிகபெரிய நட்சத்திர விடுதியில் உள்ள கழிவறையில் இந்துக்கள் வழிபடும் பார்த்தசாரதி கோவில் படம் வைக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்கள் வந்து போகும் இடமாக திகழும் இந்த நட்சத்திர விடுதியின் கழிவறையில் இந்துக்களை இழிவு செய்யும் விதத்தில், அவர்கள் மனம் புண்படும்படி அங்கே தொங்கவிடப்பட்ட பார்த்தசாரதி கோவில் படம் சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்துக்களின் மிகபெரிய ஆச்சாரமுறைபடி மலஜலம் கழிக்கும் பொழுது கோவில் கோபுரமோ சிலையோ கண்ணில் தெரிய கூடாது என்பது முக்கியமானது கோபுர பிம்பத்துக்கு அவர்கள் கொடுக்கும் மகா முக்கியத்துவம் அப்படி, ஆனால் GRT Grand நட்சத்திர விடுதியில், இந்துக்களை சீண்டும் விதத்தில் பார்த்தசாரதி கோவில் புகைப்படம் கழிவறையில் தொங்கவிடப்பட்டுள்ளதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டினார்.

மேலும் இது போன்று மற்ற மத அடையாளங்களை இப்படி வைக்க முடியுமா? இது இந்துக்களுக்கு மிகபெரிய அவமானம், இந்துக்களின் மனதை மிக கடுமையாக புண்படுத்தும் செயல், அந்த நட்சத்திர விடுதியை முற்றிலும் புறக்கணிக்க இந்துக்கள் ஓன்று படவேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது. மேலும் இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் வைரலாகி வந்ததை தொடர்ந்து, இந்து அமைப்பினர் ஹோட்டலிலுக்கு நேரடியாக சென்று அந்த சம்பவம் உண்மை என உறுதிபடுத்தபட்டது.

இதனை தொடர்ந்து இந்த சம்பவத்துக்கு ஹோட்டல் நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை, அந்த ஹோட்டலின் பொது மேலாளர் விளக்கம் கொடுத்துள்ளார், இது ஏதோ சமூக விரோதி வேண்டுமென்றே ஹாலில் வைத்திருந்த புகைப்படத்தை எடுத்து கழிவறையில் வைத்து புகைப்படம் பகிர்ந்துள்ளதாக கூறி ஹோட்டலின் பொது மேலாளர் வருத்தம் தெரிவித்துள்ளார். ஹோட்டல் நிர்வாகம் அந்த படத்தை உடனடியாக இடம் மாற்றி இனி இப்படி நடக்காது என உறுதியளித்திருக்கின்றது

ஆனால் இது தொடர்பாக சமூக ஆர்வளர் ஒருவர் கூறுகையில், அந்த மேலாளர் சொன்னபடி சமூக விரோதி யாரும் ஹாலில் இருந்த படத்தை எடுத்து கழிவறையில் வைக்கவில்லை மாறாக அதை கண்ட அன்பர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அங்கிருப்போர் அதை மாற்றிவைக்க நினைக்கவில்லை ஆக சமூகவிரோதிகள் அந்த விடுதியின் உள்ளேதான் இருக்கின்றார்கள், சிக்கல் வந்தவுடன் கதையினை மாற்ற பார்க்கின்றார்கள் பல நாட்டவர் வந்து தங்கும் அந்த நட்சத்திர விடுதி சமூகவிரோதிகளின் கூடாரமாக அந்த விடுதி ஆகிவிட கூடாது என்பதுதான் பெரும் கவலை என தெரிவித்துள்ளார்.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .