ஒருதலை காதல் தோல்வி… மனமுடைந்த இளைஞர் மலையில் இருந்து குதித்து தற்கொலை…

0
Follow on Google News

ஒருதலை காதல் தோல்வியால் மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் உடல் சமணர் படுக்கை அருகே கண்டறியப்பட்டுள்ளது, தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறை சேர்ந்து மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மதுரை மாவட்டம் ஜெய்கிந்த் புரம் பகுதியை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் என்பவரின் மகன் ஜோதி மகாலிங்கம். 23 வயதான ஜோதி மகாலிங்கம் ஒரு பொறியியல் பட்டதாரி. இவர் சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஜோதி மகாலிங்கத்திற்கு அவரது நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் மீது ஒருதலைப்பட்சமாக காதல் ஏற்பட்டுள்ளது.

தனது காதலை வெளிப்படுத்த சரியான நேரத்திற்காக காத்திருந்த ஜோதி மகாலிங்கம் கொரோனா லாக்டவுனால் மதுரைக்கு வந்த போது தன்னுடைய காதலை அந்தப் பெண்ணிடம் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அந்த பெண் காதலை ஏற்க மறுத்ததால் மிகவும் மனவேதனையில் இருந்துள்ளார் ஜோதி மகாலிங்கம். நேற்று முன்தினம் பெற்றோரிடம் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறிய ஜோதி மகாலிங்கம் கடைசியில் நேற்று திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சமணர் படுக்கையில் அருகில் இவரது சடலம் ரத்த கிடந்தது.

இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசாரும் தீயணைப்பு துறையினரும் சேர்ந்தது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணையில் ஜோதி மகாலிங்கம் ஒரு தலை காதலால் தான் தற்கொலை செய்து கொண்டதும் இவர் வீட்டை விட்டு வெளியேறிய போது ஜோதி மகாலிங்கம் தந்தை ஜெயந்திபுரம் காவல் புகார் அளித்ததும் தெரியவந்தது. ஒருதலை காதலால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.