நிச்சயதார்த்தத்திற்கு சென்று வீடு திரும்பிய போது கார் விபத்துக்குள்ளானது… ஆம்பூர் அருகே சோகம்…

0
Follow on Google News

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நிச்சயதார்த்தத்திற்கு சென்று காரில் சென்னை திரும்பிக் கொண்டிருக்கும் போது விபத்துக்குள்ளாகி மூன்று பேர் உயிரிழப்பு. சென்னை நங்கநல்லூரை சேர்ந்த சந்திரமவுலி மற்றும் வசுந்தராதேவியின் மகன் தான் வேணுகோபால். இவருக்கு வயது 25 ஆகிறது. இவருக்கு நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ள ஓசூரைச் சேர்ந்த பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நிச்சயதார்த்தம் முடிந்து நேற்று வேணுகோபால், சந்திரமௌலி, வசுந்தராதேவி காரில் சென்னைக்கு திரும்பினார். இவர்களுடன் இவர் தாத்தா கன்னையனும் வந்திருந்தார். காரை ஓட்டி வந்த மகன் வேணுகோபால் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் கடந்து செங்கிலிகுப்பம் வந்து கொண்டிருந்த போது, திடீரென்று எதிர்பாராத வேளையில் முன்னே சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சேர்ந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் வேணுகோபாலன் அவரது தாத்தாவும் சம்பவ இறந்து விட்டனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வசுந்தராதேவி மற்றும் அவரது கணவர் சந்திரமவுலியை ஆம்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி வசுந்தரா தேவியும் இறந்துவிட்டார். சந்திரமௌலி மட்டும் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். நிச்சயதார்த்தத்திற்கு சென்று வீடு திரும்பிய போது நடைபெற்ற இந்த விபத்துச் சம்பவம் ஆம்பூர் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.