அடிக்கடி வரும் பேய்க்கனவு… காவலர் தற்கொலையில் மர்மம்!

0
Follow on Google News

ஆயுதப்படையில் பணியாற்றிய காவலரின் தற்கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் பின்னணியைக் கொண்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் கடலூர் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இவரின் மனைவி மற்றும் குழந்தைகள் வெளியூருக்கு சென்றிருந்த போது இவர் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இது அந்த குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து நடந்த விசாரணையில் கடந்த சில நாட்களாகவே பிரபாகரன் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் அதிகமாக பூஜை அறையிலேயே இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அவர் வசிக்கும் குடியிருப்பில் ஏற்கனவே தற்கொலை செய்துகொண்ட பெண் ஒருவர் ஆவியாக வந்து தன்னை அச்சுறுத்துவதாக நெருங்கிய நண்பர்களிடம் கூறி புலம்பியுள்ளார். இந்நிலையில் பேய்க் கனவால் ஏற்பட்ட மன உளைச்சலால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.