தமிழா அநீதிக்கு எதிராக நீ குரல் கொடுக்க வேண்டாமா.? திருப்பூரில் மைனர் பெண்ணுக்கு நடத்த கொடுமை… அதிமுகவை சேர்ந்த மணித மிருகம் செய்த செயல்..

0
Follow on Google News

கடத்த சில வருடங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் பெண்களை குறிவைத்து வேட்டையாடிய மனித மிருகங்களை யாரும் மறந்து விட முடியாது. பொள்ளாச்சி சம்பவத்துக்கு பின்பு தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக மனித மிருகங்களின் வேட்டை முடிவுக்கு வந்துள்ளதா என்றால், நிச்சயமாக இல்லை, அடுத்தடுத்து சமீபத்தில் பாண்டிச்சேரியில் நடந்த கொடுமையில் இருந்தே மக்கள் மீண்டு வராத நிலையில் தற்பொழுது 6 பேர் கொண்ட மனித மிருகங்களால் 17 வயது சிறுமி வேட்டையாட பட்டுள்ளார்.

திருப்பூர் காங்கேயம் அருகில் உள்ள வெள்ள கோவில் என்ற கிராமத்தில் சமீபத்தில் கோவில் திருவிழா ஒன்று நடந்துள்ளது. அந்த கோவில் திருவிழாவில் இரவு நிகழ்ச்சியாக ஆடல் பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக 17 வயது சிறுமி தன்னுடைய தாயாருடன் சென்றுள்ளார். நிகழ்ச்சி மிக விறுவிறுப்பாக சென்று கொண்டு இருந்த நிலையில், மிக நீண்ட நேரம் ஆகிவிட்டதால் வீட்டிற்கு செல்லலாம் என்று சிறுமியை அவருடைய தாய் அழைத்துள்ளார்.

இசை நிகழ்ச்சியில் மூழ்கி இருந்த சிறுமி, நிகழ்ச்சி முடிந்தது செல்லலாம் என அவருடைய தாயாரிடம் தெரிவிக்க, நான் வீட்டிற்கு செல்கிறேன், நீ நிகழ்ச்சியை உன் தோழிகளிடம் பார்த்துவிட்டு பத்திரமாக வீடு திரும்பு என தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்று இருக்கிறார் அந்த சிறுமியின் தாய்.நிகழ்ச்சி விறு விறுப்பாக சென்றுள்ளது, அந்த சிறுமியும் மகிழ்ச்சியுடன் நிகழ்ச்சியை கண்டு ரசித்துள்ளார்.

நிகழ்ச்சி முடிந்து நீண்ட நேரம் ஆகி விட்டது, ஆனால் அந்த குழந்தை வீட்டிற்கு வரவில்லை. என்னாச்சோ எதோ ஆச்சோ என பதறி போன அந்த தாய் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு யாருமே இல்லை. பதறி அடித்துக்கொண்டு அந்தத் தாய் தன் மகளை காணவில்லையே என்று இரவெல்லாம் தேடுகிறார், மகள் கிடைக்கவில்லை என்னாச்சோ என வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார்.

அடுத்த நாள் அதிகாலை அந்த சிறுமி வீட்டிற்கு வந்த போது, எங்கே சென்றாய் என தாய் கேட்க, கண் கலங்கி அழுத்த அந்த சிறுமி, அன்று இரவெல்லாம் தனக்கு நேர்ந்த அந்த கொடுமையை அழுது கொண்டே தெரிவிக்கிறார். அதாவது அவருடைய தாயார் கச்சேரியை விட்டு சென்ற பின்பு அந்த கச்சேரியை மகிழ்ச்சியாக ரசித்த அந்த 17 வயது சிறுமி நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது, அங்கிருந்த இரண்டு நபர்கள் உங்களை நாங்கள் பத்திரமாக வீட்டிற்கு சென்று விட்டு விடுகிறோம் என்று பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்கள்.

ஆனால் அவர்கள் அந்த சிறுமியின் வீட்டிற்கு செல்லவில்லை வேறு ஒரு மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று அந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்கள். மேலும் அவர்களுடன் சேர்ந்து அந்தப் பகுதியில் காரில் வந்த மேலும் நான்கு நபர்கள் அந்த 17 வயது சிறுமியை காரில் ஏற்றி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று அந்த சிறுமியையே வேட்டையாடி உள்ளார்கள் அந்த மனித மிருகங்கள்.

இந்த பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு மனித மிருகங்களில் ஒருவன் அதிமுக ஐடி விங்ல் முக்கிய பொறுப்பில் இருக்கக்கூடிய ஒரு நபர் என்பது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவன் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்வதற்காக அதிமுக கட்சி கொடி கட்டிய காரில் வந்து இது போன்ற கொடூரத்தில் ஈடுபட்டுள்ளார். 17 வயது சிறுமிக்கு நடந்த இந்த கொடூரம் தமிழகத்தையே உலுக்கி கொண்டிருக்கையில்.

பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றார்கள் வயிற்றில் நெருப்பை பற்றி எரிய வைத்துள்ளது. இந்நிலையில் 17 வயது சிறுமிக்கு நடந்த கொடுமைக்கு உடனே தீர்வு காண, போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து 17 வயது சிறுமியை வேட்டையாடிய மணித மிருங்கங்களில் நான்கு நபர்களை கைது செய்துள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு நபர்களை வலைவீசி தேடி வருகிறது. விரைவில் இவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும் என நம்பப்படும் நிலையில், இது போன்ற மனித மிருகங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்பதை கமெண்ட் செய்யுங்கள்..