இதுக்கு தான் ஈஷா மய்யத்துக்கு நடிகைகள் செல்கிறார்கள்… பயில்வான் சொன்ன பகீர் தகவல்..

0
Follow on Google News

சினிமா நடிகர்கள் நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோவை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருப்பவர் பயில்வான் ரங்கநாதன். இவரது சர்ச்சைக்குரிய பேச்சுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் எதையும் காதில் போட்டுக் கொள்ளாத பதில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பல்வேறு விஷயங்களை பேசி வருகிறார்.

அந்த வகையில் தற்போது நடிகர் நடிகைகள் ஏன் ஈஷா யோகா மையத்திற்கு செல்கின்றனர் என்பது பற்றி பேசியுள்ளார். பயில்வான் வெளியிட்ட இந்த வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பெரும்பாலான சிவ பக்தர்களும் ஆன்மீகவாதிகளும் படையெடுக்கும் இடங்களில் ஒன்றாக கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம் உள்ளது.

இங்குள்ள மிகப்பெரிய ஈசனின் மார்பளவு சிலையை காண்பதற்காகவும் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காகவும் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்வதுண்டு. இந்த ஈஷா யோகா மையம் மக்கள் மத்தியில் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.சத்குரு ஜக்கி வாசுதேவ் நிர்வகித்து வரும் இந்த மையத்திற்கு ஏராளமான சினிமா பிரபலங்களும் அரசியல்வாதிகளும் அவ்வப்போது வந்து செல்கின்றனர்.

குறிப்பாக சிவராத்திரி வந்து விட்டால் போதும், நடிகை சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா, பூஜா ஹெக்டே, அமலாபால், சங்கர் மகாதேவன், சந்தானம் உள்ளிட்ட பிரபலங்கள் மனம் உருகி ஈசனை வழிபட்டு செல்வார்கள். அப்படி இந்த வருட சிவராத்திரி பூஜையிலும், தமன்னா, சந்தானம் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு விடிய விடிய நடந்த பூஜையில் ஈசனை வழிபட்டுச் சென்றனர்.

இரவு முழுவதும் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட அனைவரும் ஜக்கி வாசுதேவ் உடன் சேர்ந்து பரவசத்தோடு நடனமாடினர். மேலும் ஜக்கி வாசுதேவ் உடன் சேர்ந்து சிவனை மனமுருகி வணங்கினர். நடிகைகள் தமன்னா மற்றும் பூஜா ஹெக்டேவும் மனமுருகி வணங்கினர். இதில் சங்கர் மகாதேவன் சம்போ சிவ சம்போ பாடலை பாடி அரங்கத்தை அதிரச் செய்தார். இந்தப் பாடலை கேட்டு அங்கிருந்தவர்கள் உற்சாகமாக ஆடினர்.

அவர்களுடன் நடிகை பூஜா ஹெக்டேவும் இந்தப் பாடலுக்கு வைப் செய்தார். இதேபோல் பல்வேறு பாடல்களுக்கு நடிகைகள் தமன்னா மற்றும் பூஜா ஹெக்டே டான்ஸ் ஆடி மகிழ்ந்தனர். குறிப்பாக நடிகர் சந்தானம் கண்களை மூடி கண்ணீர் மல்க சிவனை வழிபட்ட வீடியோ இணையம் முழுவதும் வைரலாகி விவாதத்திற்கு உள்ளானது. இப்படி சினிமா பிரபலங்களும் அரசியல்வாதிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஈஷா யோகா மையத்திற்கு வருவதன் பின்னணி என்ன என்பது பற்றி பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது பற்றி பயில்வான் கூறுகையில்.

“எப்போதும் சர்ச்சைக்குரிய விஷயங்கள் எங்கே இருக்கிறது என்பதை தேடி அங்கே செல்வேன். அப்படியே ஏதாவது ஒரு விஷயம் சிக்குமா என்று தான் ஈஷா மையத்திற்கு சென்றிருந்தேன். ஆனால் அங்கு எனக்கு எதுவுமே கிடைக்கவில்லை. மாறாக எனக்குள் ஒரு பாசிட்டிவ் வைப் தோன்றியது.அது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

பொதுவாக மனிதனது வாழ்வில் காசு பணம் எல்லாத்தையும் தாண்டி நிம்மதி தான் முக்கியம். அந்த நிம்மதியைத் தேடி தான் பல நடிகர்நடிகைகள் ஈஷா யோகா மையத்திற்கு வருகின்றனர் என்பதை நான் தெரிந்து கொண்டேன்.” என தெரிவித்த பயில்வான். எப்போதும், மற்றவர்களை இழிவுபடுத்தி எல்லாம் தெரிந்தவாறு பேசி சர்ச்சைக்குரிய வகையில் பேசும் பயில்வான் ரங்கநாதன், ஈஷா யோகா மையத்தை பற்றி பாசிட்டிவாக சொல்லி இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்ததுடன் அவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.