“ப்ளே பாய்க்கு வாழ்த்துக்கள்” உதயநிதிக்கு எதிராக பாஜக மாநில நிர்வாகியின் செயலால் பரபரப்பு..

0
Follow on Google News

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிகழ்வு திமுக தொண்டர்கள் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள். அதே வேளையில் வாரிசு அரசியல் என்கிற விமர்சனமும் அமைச்சர் உதயநிதி மீது எழுந்துள்ளது. இந்நிலையில் வாரிசு அரசியல் மற்றும் உதயநிதிக்கு எதிராக வரும் கருத்துக்களுக்கு பதிலடி தரும் விதத்தில் திமுகவினர் அவர்களின் தரப்பு விளக்கங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

வாரிசு அரசியல் குறித்து எழுந்துள்ள விமர்சனத்திற்கு பதில் தரும் விதத்தில் திமுகவை சேர்ந்த ராஜிவ் காந்தி தெரிவிக்கையில், இராஜராஜ சோழன்,இராஜேந்திர சோழன் என்று அரசர்களை தங்களின் பெருமை,அடையாளம் என கொண்டாடும் இந்த நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியை வாரிசு என்று வசைபாடி ஒதுக்க நினைப்பது ஒருவித நவீன மனுதர்மமே! என சோழ மன்னர்களை உதாரணம் காட்டி உதயநிதிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துளளார்.

இதே போன்று, இயக்குனர் கரு. பழனியப்பன், Stalin is dangerous than Karunanidhi என்று கதறியவாளுக்குத் தெரியும், Udhayanidhi is more dangerous than Stalin என்று .உதயநிதி கூடுதல் பொறுப்புக்கு வாழ்த்துக்கள் சின்னவரே.!! என தெரிவித்துள்ளார், அவரை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துகிறேன் தம்பி உதயநிதி. அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இப்படி ஒரு தரப்பினர் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றதை வாழ்த்துக்கள் மூலம் பரிமாறிக்கொண்டிருக்கையில். மதுரையை சேர்ந்த பாஜக மாநில நிர்வாகி Dr. சங்கர் பாண்டி உதயநிதியை கிண்டல் செய்யும் வகையில் மதுரை மாநகர் முழுவதிலும் பாஜக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு பாஜக மாநில நிர்வாகி Dr. சங்கரபாண்டி அவருடைய புகைப்படத்துடன் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டர்களில், “தமிழகத்தின் அமைச்சராக பதவியேற்கும் உபிஸ்களின் சின்னவர் உதயநிதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என்றும், மக்களின் வரிப்பணம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் செலவு செய்து மெரினா கடற்கரையில் இவர் திறந்து வைத்த மாற்றுத்திறனாளிகளின் மரப்பாதை வெறும் 13 நாட்களின் புயல் வருவதற்கு முன் வீசிய காற்றில் மரப்பாதை இடிந்து போன சாதனையை செய்து திமுக ஊழல் அமைச்சரவையில் இடம்பெறும் ப்ளே பாய்க்கு வாழ்த்துக்கள்” என்றும்,

அதே போஸ்டரில் “மெரினா மரப்பாதை மூலம் வைகை தெர்மாகோல் சாதனையை முறியடித்த சின்னவருக்கு வாழ்த்துக்கள்” என அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினை கிண்டல் செய்யும் விதத்தில் அந்த போஸ்டரில் வாசகம் அடங்கிய போஸ்டர்கள் மதுரை மாநகரின் ப்ல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளதது. பாஜக மாநில நிர்வாகி Dr சங்கர் பாண்டியின் இந்த போஸ்டர்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.

இந்தப் போஸ்டர்கள் பெரும்பாலும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதற்கு வாழ்த்து தெரிவித்து திமுகவினர் ஒட்டிய போஸ்டர்களுக்கு அருகே ஒட்டப்பட்டுள்ளன. மேலும் யார் இந்த Dr சங்கர் பாண்டி என்று விசாரித்ததில், இதற்கு முன்பு இது போன்று திமுகவுக்கு எதிராக பலரது கவனத்தை ஈர்க்கும் வகையில் வித்தியாசமான அரசியலை தொடர்ந்து செய்து வரக்கூடியவர் என்று கூறப்படுகிறது.

அமைச்சரான உதயநிதி .. பெரும் சோகத்தில் கமல்ஹாசன்.. என்ன காரணம் தெரியுமா.?