திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் 18 வயது இளைஞன் சடலமாக மீட்பு.! கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை.!

0
Follow on Google News

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த லெட்சுமணன் (18) இவரது நண்பர் பழனிவேல்ராஜன்(20) இருவரும் திருப்பரங்குன்றத்தில் ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள வந்துள்ளனர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கிளம்பும் போது இருவரும் சரவணப்பொய்கையில் குளிக்க சென்றுள்ளனர் பழனிவேல்ராஜன் கரை அருகே குளித்து கொண்டு இருந்துள்ளார் லட்சுமணன் நீச்சலடித்து ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார்.

சற்றும் எதிர்பாராத விதமாக திடீரென லெட்சுமணன் மூச்சுதினரல் ஏற்ப்பட்டு தத்தளித்து நீரில் மூழ்கிவிட்டார் அதனையடுத்து அருகில் இருப்பவர்கள் தீயனைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர் உடனடியாக வந்த தீயனைப்பு துறையினர் 1மணி நேரமாக போராடி அவரது உடலை மீட்டனர் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் சரவணப்பொய்கையில் ஏற்படுகிறது வேதனையளிப்பதாகவும் கோவில் நிர்வாகம் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கேட்டு கொண்டுள்ளனர்