காயத்தால் அவதிப்படும் புதுக் கேப்டன்… தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்து நீக்கம்!

0
Follow on Google News

தென்னாப்பிரிக்கா செல்ல உள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்திய அணியின் லிமிடெட் ஓவர் கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிகளுக்கு துணைக் கேப்டனாகவும் ரோஹித் ஷர்மா ப்ரமோஷன் வாங்கி இருக்கிறார்.

இதையடுத்து அவர் தென்னாப்பிரிக்காவில் நடக்க உள்ள ஒரு நாள் தொடரில் இருந்து முழுநேரக் கேப்டனாக செயல்பட உள்ள அவருக்கு காயம் மிகப்பெரிய சிக்கலாக உருவாகியுள்ளது.

நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலேயே அவர் காயம் காரணமாக விலகிய நிலையில் இப்போது தென் ஆப்பிரிக்காவில் நடக்க உள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் அவர் காயம் காரணமாக நீக்கப்பட்டு அவருக்கு பதில் பிரயாங்க் பிரான்ச்சல் என்ற அறிமுக வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.