இரண்டு இளம் வீரர்களால் ஆட்டம்காணும் தவானின் இடம்! தென் ஆப்பிரிக்கா செல்லும் அணியில் இருப்பாரா?

0
Follow on Google News

இந்திய அணியை தேர்வு செய்வதில் இப்போது இருக்கும் மிகப்பெரிய சிக்கல் யாரை அணியில் இருந்து எடுப்பது என்பதாகதான் இருக்கும். இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை பொறுத்தவரை இப்போது ஒவ்வொரு இடத்துக்கும் சுமார் 2க்கும் மேற்பட்டவர்கள் தகுதியாக இருக்கிறார்கள். ஓப்பனிங் பேட்டிங்கையே எடுத்துக் கொண்டால் ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல், ஷிகார் தவான், பிருத்வி ஷா என பல பேர் உள்ளனர்.

இதில் யாரை அணியில் எடுப்பது என்பதுதான் பெரும் குழப்பமாக தேர்வுக்குழுவினருக்கு இருக்கும். இந்நிலையில் இப்போது நடந்து வரும் விஜய் ஹசாரே கோப்பைத் தொடரில் ருத்துராஜ் மற்றும் வெங்கடேஷ் ஆகிய இருவரும் சிறப்பான பார்மில் இருக்கிறார்கள். இவர்கள் இருவருமே ஓபனிங் இறங்கி விளையாடக் கூடியவர்கள்.

அதனால் தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய ஒருநாள் அணியில் இவர்கள் இருவரும் இருக்க வாய்ப்புண்டு என சொல்லப்படுகிறது. அப்படி இவர்கள் சேர்க்கப்பட்டால் கண்டிப்பாக நீக்கப்படும் வீரராக ஷிகார் தவான்தான் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் வயது காரணமாக இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். விரைவில் தென் ஆப்பிரிக்கா செல்லும் அணி அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.