எல்லாம் நடிப்பு… நம்பாதீங்க… கிரிக்கெட் வீரர் முகமது சமி பற்றி பரபரப்பு குற்றசாட்டுகளை வைத்து கீழ்த்தரமாக விமர்சித்த மனைவி…

0
Follow on Google News

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக நடந்து முடிந்த 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் அசத்தினார். உலககோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக திகழ்ந்தார். மேலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி இறுதி போட்டிக்கு நுழைய உறுதுணையாக இருந்தார்.

கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஷமி விளையாடினர். அதன்பின், கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, ஜனவரி கடைசி வாரத்தில் சிகிச்சை எடுத்த போது ஊசி ஒன்று செலுத்தப்பட்டதால் அவரால் ஓட முடிந்தது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவரது காயத்தால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பி.சி.சி.ஐ. அதிகாரி ஒருவர் ஏற்கனவே கூறியிருந்தார்.

இதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை. சிகிச்சையை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. இதையடுத்து முகமது ஷமி கடந்த மாதம் லண்டனில் சிகிச்சை எடுத்தார். அந்த சிகிச்சை அவருக்கு ஓரளவு மட்டுமே பலன் அளித்தது. இருப்பினும் காயம் முழுவதுமாக குணமாகவில்லை. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி மருத்துவமனையில் அவருக்கு இடது கணுக்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான போட்டோவை முகமது ஷமி தனத எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், ‛‛வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. இதில் இருந்து குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதை எதிர்நோக்கி உள்ளேன்” என தெரிவித்துள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் விரைந்து குணமடைய வேண்டும் என முகமது ஷமிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் முகமது ஷமியின் முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் தற்போது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவிட்டிருக்கிறார். முன்னர் ஷமி மீது ஹசின் சூதாட்ட புகார் வைத்து இருந்தார். அது தவறு என்று நிரூபிக்கப்ட்டது. இதனால் அவர் தனது குழந்தையை பிரிய நேர்ந்தது. பிசிசிஐ அப்போதில் இருந்து அவரை கொஞ்சம் தள்ளியே வைத்து இருந்தது. அடிக்கடி அவரை புறக்கணிக்க தொடங்கியது.

ஷமி தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாக அவரது மனைவி ஹசின் ஜகான் குற்றச்சாட்டு வைத்து இருந்தார். ஷமி பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறினார். அவர் செய்த ஆபாசமான சாட்களை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். அதேபோல் அவர் எந்தெந்த பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார். ஆனால் இந்த புகார்கள் எல்லாம் பொய்யானது என்று ஷமி கூறினார். இந்த புகார்கள் எதுவும் நிரூபிக்க முடியாத நிலையில் ஷமி மீண்டும் கிரிக்கெட்டிற்கு வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இருவரும் விவாகரத்தும் பெற்றனர்.

இந்நிலையில் தற்போது வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், பிரபல ஆசிரியர் ஒருவர் வீரர்கள் மத்தியில் உள்ள திருமணம் தாண்டி உள்ள உறவுகள் குறித்து வீடியோ ஒன்றை போட்டு இருந்தார். அதில், சிலருக்கு எப்போது கோபப்பட வேண்டும். எப்போது சிரிக்க வேண்டும் என்றெல்லாம் நன்றாக தெரியும். அவர்கள் தங்களுடைய உணர்ச்சியை அவர்களுடைய சுலபத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்வார்கள் என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

இந்த வீடியோவை பகிர்ந்த முகமது ஷமியின் மனைவி இதுபோன்ற நாய்கள் சத்தமாக கத்தும். தங்களை வித்தியாசமானவர்களாக காட்டிக்கொள்ளும். அவருடைய கோபம் எப்போதுமே இருக்கும். முகம் கூட சிவந்து விடும். ஆனால் நாங்கள் ஆப்பிள் சாப்பிடுவதால் தான் இப்படி இருக்கின்றோம் என்று கூறுவார்கள் என முகமது ஷமியை மறைமுகமாக மனைவி திட்டி போட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.