சிக்கலில் சூரி,விஜய் சேதுபதி, வெற்றிமாறன்… போதை பொருள் கடத்தல் மன்னன் உடன் இவர்களுக்கு என்ன தொடர்பு..

0
Follow on Google News

இந்தியாவே உலுக்கியுள்ள போதை பொருள் போதைப் பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்கிற தகவல் தமிழகம் முழுவதும் மிக பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஜாபர் சாதிக் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுப்பதற்கு பின்னணியில் இருந்து செயல்பட்டது இயக்குனர் அமீர் தான் என்றும், அவர் மூலம் தான் வெற்றிமாறன், நடிகர் சூரி, விஜய் சேதுபதி ஆகியோருடன் ஜாபர் சாதிக்க்கு நெருக்கம் ஏற்பட்டது என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில் போதை பொருள் கடத்தலில் மாஃபியா போன்று செயல்பட்டு வந்த ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்து வரும் நிலையில், டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகுமாறு சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டிற்கு சம்மன் கொடுக்க போலீசார் சென்றனர், ஆனால், ஜாபர் சாதிக் வீடு பூட்டி இருந்த நிலையில், வீட்டில் போலீஸார் சம்மன் ஒட்டி சென்றனர்.

இதையடுத்து ஜாபர் சாதிக் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், ஜாபர் சாதிக் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் சில முக்கியஆவணங்களை கைப்பற்றிய போலீசார் ஜாபர் சாதிக் வீட்டுக்கு சீல் வைத்தனர். மேலும் தொடர்ந்து தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக் மற்றும் கூட்டாளிகளை டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருக்கும் ஜாபர் சாதிக் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும்வகையில், ஜாபர் சாதிக்குக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் போலீஸார் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் கொடுத்துள்ளதால், அனைத்து விமான நிலைய அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜாபர் சாதிக் எந்த விமானநிலையத்துக்கு சென்றாலும், உடனடியாக அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவார்.

அந்த வகையில் போதை பொருள் கடத்தல் தலைவன் ஜாபர் சாதிக் கடல், தரை மார்க்கமாக அவர் வெளிநாடு தப்பிச் செல்லாத வகையில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு அதன் மூலம் பல கோடிகளை கோடிகளில் குவிந்து, அந்த பணத்தில் மூலம் பல தொழில்களில் முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக சினிமாவில் முதலீடு செய்து வந்துள்ளார்.

டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், தமிழக பிரிவை சேர்ந்த அதிகாரிகளுடன் கைகோர்த்துக் கொண்டு ஜாபர் சாதிக்கின் முழு பின்னணியையும் அலசி ஆராய்ந்து வருவதால், போதை பொருள் கடத்தல் தலைவன் ஜாபர் சாதிக் உடன் நெருங்கி பழகி வந்த அரசியல்வாதிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஆகியோர் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

இதற்கிடையே, ஜாபர் சாதிக்கின் பின்னனி, நட்பு வட்டாரம், தொழில்பங்குதாரர்கள் குறித்தும் தகவல் திரட்டப்பட்டு வருகிறது. அவர்சட்ட விரோதமாக சம்பாதித்தபணத்தை எங்கெல்லாம் முதலீடுசெய்துள்ளார் என்பது குறித்ததகவல்களையும் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். இதில் யார்-யாருக்கு தொடர்பு உள்ளது என்பது பற்றிய விவாதங்கள் தெரிய வந்ததும் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

தனால் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். குறிப்பாக ஜாபர் சாதிக் உடன் நெருங்கிய நட்பில் இருந்த அமீர் மற்றும் அமீர் மூலம் ஜாபர் சாதிக் உடன் நெருக்கிய நட்புடன் இருந்த இயக்குனர் வெற்றிமாறன் , நடிகர் சூரி, விஜய் சேதுபதி போன்ற சினிமா பிரபலங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரலாம் என்று கூறப்படுவதால், ஒட்டு மொத்த சினிமா துறையும் கதிகலங்கியுள்ளது என்கிறது சினிமா வட்டாரங்கள்.