சிஎஸ்கே அணியில் இருந்து தோனி விலகலா.?அணியின் சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…

0
Follow on Google News

அடுத்து வரும் ஐபிஎல் தொடரில் தன்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்கவைக்க வேண்டாம் என அணியின் நிர்வாகத்திடம் தோனி தெரிவித்துள்ள செய்தி வெளியாகி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. எம்.எஸ்.தோனி சென்னை அணி நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெற இருக்கிறது.

அடுத்த ஆண்டு 2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் அதில் விளையாடும் ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் நடைபெற உள்ள நிலையில், இந்த ஏலத்தில் புதிதாக 2 அணிகள் இணைகிறது. பொதுவாக ஐபிஎல் வீரர்களுக்கான 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏலம் நடைபெறும் . ஏலத்தில் போது அணியின் 3 முதல் 4 வீரர்களை அந்தந்த அணியின் நிர்வாகம் தக்க வைத்து கொண்டு மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்தில் விடப்படுவார்கள்.

இந்நிலையில் இந்த முறை ஏலத்தில் புதியதாக 2 அணிகள் பங்குபெறுவதால். ஏலத்தின் விதிமுறையில் பல்வேறு மாற்றங்கள் ஐபிஎல் கொண்டு வந்துள்ளது, அதில் முக்கியமான ஒன்று, ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும்.மேலும் Right to match card முறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கலாம் என அணிகள் குழப்பத்தில் உள்ளது.

இந்நிலையில் மற்ற அணியின் நிர்வாகங்கள் இதுவரை எந்த வீரர்களை தக்க வைத்து கொள்ள போகிறார்கள் என தெரிவிக்காத நிலையில், தோனியை கண்டிப்பாக தக்கவைப்போம் என சென்னை அணி மட்டும் தெளிவான முடிவை அறிவித்தது.ஆனால் அதற்கு பிரச்சனை ஏற்படுவது போன்று அமைந்துள்ளது புதிய விதிமுறைகள், அதாவது ஒரு அணி 4 வீரர்களை தக்கவைக்க விரும்பினால், முதன்மை வீரருக்கு ரூ.16 கோடி ஊதியமாக தரவேண்டும்.

அதே போன்று, 3 வீரர்களை தக்கவைத்தால் ரூ.15 கோடி தர வேண்டும். ஒன்று அல்லது 2 வீரர்களை தக்கவைத்தால் ரூ.14 கோடி ஊதியம் தர வேண்டும் எனவும் பிசிசிஐ கூறியுள்ளது. இந்நிலையில் அவ்வளவு அதிக தொகை கொடுத்து தன்னை தக்க வைத்து கொண்டால் அது சிஎஸ்கேவுக்கு தான் நஷ்டம் ஏற்படும், எனவே தன்னை தக்க வைக்க வேண்டாம் என தானாக முன் வந்து சிஎஸ்கே நிர்வாகத்திடம் தோனி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில். இதுகுறித்து சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசன் அளித்துள்ள பேட்டியில், எம்.எஸ்.தோனி ஒரு நியாயமான மனிதர். அவர் எங்களிடம் அதிக தொகை கொடுத்து தன்னை தக்கவைக்க வேண்டாம். அது சிஎஸ்கேவுக்கு தான் நஷ்டம் எனக் கூறியதாக தெரிவித்துள்ளார். ஆனால் நாங்கள் தோனியை விடப்போவதில்லை. முன்பே கூறியபடி அவர் இலலாமல் சிஎஸ்கே இல்லை. தோனி தான் எங்களின் முதல் தேர்வு. எனினும் அணியில் தோனியை போன்றே நீண்ட காலம் இருக்கும் வேறு வீரர்களுக்கும் இதே சலுகையை கொடுக்க முடியாது என திட்டவட்டமாக சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதியை ஹீரோவாக சித்தரிக்கும் முயற்சியில் வெற்றிமாறன்…