திமுக ஆட்சியில் இருந்த போது இருந்ததா இல்லையா? அப்போது ஏன் எதிர்க்கவில்லை.? ஸ்டாலினை வெளுத்து வாங்கிய நாராயணன் திருப்பதி.!

0
Follow on Google News

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கற்பிக்க பாஜக அரசு கடும் நிபந்தனைகளை விதித்திருப்பதை வன்மையாக கண்டிப்பதாகவும், ஒன்றாம் வகுப்பிலிருந்தே தமிழ்மொழி பயிற்றுவிக்கப்பட வேண்டும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார், இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,

மொழி அரசியலை முன்னெடுக்கும் தி மு க தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு என் கேள்விகள் என சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார், அதில் கேந்திர வித்யாலயா பள்ளிகள்,பாதுகாப்பு துறை அதிகாரிகளின் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது என்பதும்,பணி மாற்றத்தின் அடிப்படையில் அவர்கள் எங்கு சென்றாலும் ஒரே சீரான பாடத்திட்டத்தில் பயில வேண்டும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பதும் பின்னர் மத்திய அரசு அதிகாரிகளின் குழந்தைகளுக்காக அதே நோக்கத்தில் விரிவுபடுத்தப்பட்டது என்பதும் உங்களுக்கு தெரியுமா, தெரியாதா?

ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் படித்தால் மட்டுமே கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் மூன்றாவது மொழி பயிற்றுவிக்கப்படும் என்ற விதி, மாநிலத்திலும், மத்தியிலும் தி மு க ஆட்சியில் இருந்த பொது இருந்ததா இல்லையா? அப்போது ஏன் எதிர்க்கவில்லை.?, மூன்றாவது மொழி பயிற்றுவிக்க தற்காலிக ஆசிரியர்கள் என்பது 40 வருடங்களுக்கும் மேலாக உள்ள நடை முறை என்பதை மறந்து விட்டீர்களா? மறைத்து விட்டீர்களா?

தற்போது எந்த நிபந்தனைகளையும் புதிதாக விதிக்கவில்லை என்ற நிலையில்,திடீரென்று கொந்தளித்து அறிக்கை விடுவது தேர்தலுக்காக தான் என்பது உண்மை தானே? மலிவான மொழி அரசியலை கல்வி துறையில் பயன்படுத்துவது தவறானது என்பதை உணர மறுப்பது ஏன்? புதிய கல்வி கொள்கையில் தாய் மொழி வழி கல்வி உறுதி என்ற நிலையில், அதை நீங்கள் எதிர்ப்பதற்கு காரணம் தமிழை யாரும் கற்க கூடாது என்பதால் தான் அதை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறீர்களா?

தி மு க ஆட்சியில் இருந்த போது, தமிழ்நாட்டில் உள்ள பல கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு மாநில அரசு நிலம் கொடுத்தது இல்லையா? அப்படி கொடுத்திருந்தால், அங்கு தமிழ் அப்போது பயிற்றுவிக்கப்பட்டது என்பதோடு தற்போது நிறுத்தப்பட்டு விட்டது என்பதையும் உங்களால் நிரூபிக்க முடியுமா? இனி கேந்திர தமிழக கேந்திர வித்யாலயா பள்ளிகளில் எந்த மாணவர்களையும் சேர்ப்பதற்கு தி மு க எம் பி க்கள் பரிந்துரைக்க மாட்டார்கள் என்பதற்கான உறுதியை மேற்கொள்வீர்களா?

வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப சுலபமான முறையில் எரிவாயு முன்பதிவு செய்வதை உறுதிப்படுத்தியுள்ளது உங்களுக்கு தெரியுமா? தமிழ் மீது பாசம் இருப்பது போன்ற எவ்வளவு நடிப்பு உங்களிடம்? மூத்த மொழியாம் எங்கள் தாய் மொழி தமிழை பயன்படுத்தி மலிவு அரசியல் செய்ய கனவிலும் கருத வேண்டாம். தமிழை கொண்டு மக்களை தூண்டி விட்டு , மக்களை பின்னோக்கி தள்ள எண்ண வேண்டாம். என நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.