ஈவேராவால் சினிமா வாழ்க்கையை இழந்து தவிக்கும் சிம்புக்கு முருகனின் வேல் கை கொடுக்குமா.?

0
Follow on Google News

நடிகர் சிலம்பரசன் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கி தனது தந்தை இயக்கத்தில் காதல் அழிவதில்லை என்கிற படத்தில் மூலம் கதாநாயகனாக அடுத்த கட்டத்துக்கு சென்றார், கதநாயகனாக நடித்த முதல் படம் தோல்வியை அடைந்து சிம்பு அடுத்தடுத்து நடித்த அலை, குத்து போன்ற படங்களுக்கும் தோல்வியை சந்தித்தது, பின் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சிம்பு நடித்த கோவில் திரைப்படம் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து மன்மதன் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த சிம்பு அதில் நடித்தும் இருந்தார், மன்மதன் மிக பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து சினிமா உலகில் அனைவருடைய பாராட்டுகளை பெற்று தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைந்தார் சிம்பு, பின் தொடர்ந்து எல்லை மீறிய பேச்சுக்கள், பல்வேறு சர்ச்சைகள் என பல்வேறு குற்றசாட்டுகள் சிம்பு மீது எழுந்தது, மேலும் சிம்பு படப்பிடிப்புக்கு ஒழுங்காக வருவது இல்லை என்கிற குற்றச்சாட்டும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கூறப்பட்ட நிலையில் அவர் நடித்த படமும் தொடர் தோல்வியை சந்தித்தது.

இதனை தொடர்ந்து சிம்புவை வைத்து சினிமா எடுக்க தயாரிப்பாளர் தரப்பில் இருந்து யாரும் முன்வராத நிலையில், சில காலம் சினிமாவில் சிம்பு தென்படவில்லை, இந்நிலையில் இழந்த தனது இமேஜை ஒரு ஆல்பத்தின் மூலம் உச்சத்துக்கு கொண்டுவரும் நோக்கில், தமிழகத்தில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டு வருவதை கண்டித்தும் ஈவேராவுக்கு ஆதரவாகவும் பெரியார் குத்து என்கிற ஒரு பாடலை தனது நடனத்துடன் வெளியிட்டார் சிம்பு.

இதற்கு சிம்புவை பாராட்டி விருது வழங்கி திராவிட கழக தலைவர் கி.வீரமணி கௌரவ படுத்திய பின் சிம்புவின் கொஞ்ச நஞ்ச சினிமா வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் ஈவேராவால் சினிமா வாழ்க்கையை இழந்த நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படத்தில் இந்துக்கள் வழிபடும் முருகனின் அடையாளமாக திகழும் வேல் கையில் எடுத்துள்ளார், சேராத இடம் சேர்ந்து சினிமா வாழ்க்கையை தொலைத்த சிம்புவுக்கு கை கொடுக்குமா வேல் என்பதை படம் வெளியாகும் சமயத்தில் தெரிய வரும்.