புஸ்ஸி ஆனந்தை லெப்ட் ரைட் வாங்கிய பெண் ஐபிஎஸ்… யார் இந்த ஈஷா சிங்… வெளியான சிங்கப்பெண்ணின் பின்னணி..

0
Follow on Google News

கரூர் சம்பவத்திற்கு பின்பு நீண்ட இடைவெளிக்கு பின்பு மக்கள் சந்திப்பை மீண்டும் டோடினாகி இருக்கிறார் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், அனால் கரூர் சம்பவத்தில் நடந்த துயரத்தில் இருந்து படத்தை கற்று கொண்டு, மீண்டும் அதே தவறு நடக்காமல் இருப்பதற்கான பாடத்தை விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் போன்றார் கற்று கொள்ள வில்லை என்பது புதுசேரியில் நடந்த விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பார்க்க முடிந்தது.

புதுசேரியில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்வில், 5 ஆயிரம் பாஸ்கள் கொடுக்கப்பட்டு, QR கோட் ஸ்கேன் செய்பவர்கள் மட்டுமே மைதானத்திற்குள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என காவல்துறை அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, பாஸ் உள்ளவர்கள் மட்டும் இன்று காலை உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், விஜய் வருவதற்கு சில மணி நேரங்கள் இருந்த நிலையில் மிக குறைந்த அளவிலே மக்கள் கூட்டம் இருந்தது.

இதனால் மைதானத்திற்கு வெளியே விஜயை பார்க்க வந்தவர்களை பாஸ் இல்லாமல் உள்ளே வர சொல்லி புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதை பார்த்த காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங் தவெக நிர்வாகிகளை கடுமையாக எச்சரித்தார். “கரூரில் 40 பேர் இறந்து போயிருக்காங்க. உங்களால் 40 உயிர்கள் பலியாகி இருக்கிறது.

நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எனக்கு சொல்லாதீர்கள்” எனக் கடுமையாக பேசினார். தொடர்ந்து பாஸ் இல்லாமல் கூட்ட அரங்கிற்குள் நுழைய முயன்ற தவெக தொண்டர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. மேலும் எந்த ஒரு சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் மிக பாதுகாக்க விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி புதுசேரியில் நடக்க காரணமாக இருந்த ஐபிஎஸ் அதிகார ஈஷா சிங் குறித்த பின்னணி என்ன என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த ஈஷா சிங், யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்று 2014 ஆம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரியானார். அவர் 2018 ஆம் ஆண்டு பெங்களூரில் சட்டம் பயின்றார். டெல்லி, அருணாசலப் பிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட பகுதிகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். கல்வி மேம்பாடு மற்றும் நிர்வாகத் திறமையில் சிறந்தவர்.

ஈஷா சிங், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி யோகேஷ் பிரதாப் சிங் (ஒய்.பி. சிங்)-இன் மகள் ஆவார். ஒய்.பி. சிங், ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்து ஐ.பி.எஸ். பதவியில் இருந்து விலகியவர். ஈஷாவின் தாய் அபா சிங், இந்திய தபால் துறையில் அதிகாரியாகப் பணியாற்றியவர். பின்னர், பணியில் இருந்து விலகி வழக்கறிஞர் ஆகி, தற்போது பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்காடி வருகிறார்.

நேர்மைக்கு பெயர்பெற்ற பிரதாப் சிங் தொடர்ச்சியான பணியிட மாற்றங்கள் காரணமாக தன் பதவியை ராஜினாமா செய்து முழுநேர வழக்கறிஞராக மாறியவர். அதிகாரத்தின் தவறான பயன்பாட்டைத் தவிர்த்து, காரில் கூட சிவப்பு விளக்கை பயன்படுத்தாதவர் என்பதும் அவரது நேர்மையின் எடுத்துக்காட்டாகும். தந்தையின் நேர்மை, தாயின் சமூக அக்கறை-இவை இரண்டின் தாக்கத்தினாலும் இஷா சிங் சிறுவயதிலிருந்தே துணிவு மற்றும் மனிதநேயத்துடன் வளர்ந்தார்.

அரசுப் பணியைத் தாண்டி, ஈஷா சிங் தனது சட்ட அறிவால் பொது நலப் பணிகளில் பங்களித்துள்ளார். செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் இறந்த ஊழியர்களின் மனைவிகளுக்குத் தனது வாதத் திறமையால் ரூ.10 லட்சம் இழப்பீடு பெற்றுத் தந்தார். போலியாக ஜோடிக்கப்பட்ட வழக்கில் சிக்கி சிறையில் இருந்த பெண்ணுக்கு ஜாமீன் பெற்றுத் தந்தார். எத்தனைப் பிரச்னைகள் வந்தாலும், நீதியை நிலைநாட்டும் வகையில் ஈஷா சிங் செயல்பட்டு வருகிறார்