அடுத்த 5 ஆண்டுகளில் இந்து கோவில் சரி செய்ய முடியாத நாசம்….திமுகவின் திட்டம்.. பிரபல எழுத்தாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

0
Follow on Google News

திமுக ஆட்சிக்கு வந்த பின்பு தொடர்ந்து மீடியாக்களில் அடிக்கடி தோன்றும் மூன்று முக்கிய அமைச்சர்களில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், மற்றும் அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு, இதில் கொரோனா தொற்றின் காரணமாக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் தனது சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மீடியாவில் முன்னிலை வகித்தனர்.

ஆனால் அறநிலை துறை அமைச்சர் தொடர்ந்து மீடியாவில் முன்னிலை பெற்று வருவது, தமிழக அரசியலில் திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்கிற பிம்பத்தை உடைக்கவே திமுக தொடர்ந்து அறநிலை துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக இதுவரை கூறப்பட்டு வந்த நிலையில், ஆனால் காரணம் அது அல்ல தற்போது நல்லது செய்வது போன்று வரவழைத்து பின் அவர்களின் திட்டமே வேறு என திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார் பிரபல எழுத்தாளர் மாரித்தாஸ்.

அவர் தெரிவித்துள்ளதாவது, திமுக அரசின் கோவில் நகைகள் உருக்குதல் திட்டம் ஆரம்பித்து சமீபத்திய இந்து அறநிலையத்துறை போக்குகள் சார்ந்த என் பக்க ஆய்வினை இன்று வெளியிடுவதாகக் கூறியிருந்தேன். தவீர்க்க முடியாத சில காரணங்களால் இன்று வெளியிட முடியவில்லை. அதனை நாளை வெளியிட முயற்சிக்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்க என தெரிவித்துள்ள மாரிதாஸ்.

மேலும், இந்து அறநிலையத்துறை வைத்து நல்லது செய்வது போல் செய்திகளை வரவைக்கும் திமுக அரசு உண்மையில் இந்து கோவில் நிர்வாகத்தை முழுமையாகக் கெடுத்து அடுத்த 5 ஆண்டுகளில் கோவில் நிர்வாகம் மீண்டும் சரி செய்ய முடியாத அளவு நாசம் செய்வது தான் இந்த கிரிப்டோ திமுகவின் உண்மையான செயல் திட்டம் என்பதை விரிவாக நாளை வெளியிட முயற்சிக்கிறேன்.

கோவில் நிர்வாக விவகாரத்தில் திமுகவுடன் இந்து விரோத சக்திகள் ஒன்றிணைந்து ஒரு மோசமான நோக்கத்தோடு வேகமாகச் செயல்படுகிறது என்பது தான் அசைக்க முடியாத உண்மை. போதிய விழிப்புணர்வும் தேவை என எச்சரித்துள்ளார் மாரிதாஸ். இந்நிலையில் வெளியாக இருக்கும் மாரிதாஸ் வீடியோவில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

திமுகவை எதிர்த்து துர்கா ஸ்டாலின் தலைமையில் பாஜகவின் அடுத்த ஆர்ப்பாட்டமா.?