மேக்கப் போட்டு நடிக்கும் ஸ்டாலின் நாடகம் தமிழகத்தில் இனி எடுபடாது.!தனது பாணியில் வெளுத்து வாங்கிய ராஜேந்திர பாலாஜி.!

0
Follow on Google News

சிவகாசி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் சிவகாசி அருகே திருத்தங்கல்லில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

திமுகவினர் ஒன்றுமே செய்யாமல் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க நினைக்கின்றனர். எல்லா மத வழிபாட்டு தலங்களுக்கும் நான் சென்று உள்ளேன். எந்த மதத்தினரும் எனது குங்குமம் பொட்டை அளித்து விட்டு உள்ளே வர சொல்லவில்லை. எல்லா மதங்களின் வழிபாட்டு முறைகளோடு நான் இணைந்து செயல்பட்டு வருகிறேன். இஸ்லாமியர்கள் ஓட்டுக்களும் திமுகவுக்கு கிடைக்காது, கிறிஸ்தவர்கள் ஓட்டும் திமுகவுக்கு கிடைக்காது. இந்துக்களும் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். சிந்திக்கின்ற திமுகவினர் கூட அண்ணா திமுகவிற்குதான் வாக்களிக்கப் போகிறார்கள்.

ஒவ்வொரு தேர்தலிலும் ஸ்டாலின் நாடகம் போடுகிறார். ஸ்டாலின் நாடகம் தமிழகத்தில் இனி எடுபடாது. திமுக இன்று ஒரு அறைக்குள் கம்ப்யூட்டர் பெட்டிக்குள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. மேக்கப் போட்டு ஸ்டாலின் நடித்துக் கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆர். பாட்டை வைத்து நிறைய பேர் பட்டம் வாங்கி இருக்கின்றனர். புரட்சித்தலைவர் உருவாக்கிய இந்த கட்சி புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்க்கப்பட்ட இந்த கட்சியை யாராலும் அழிக்க முடியாது.

32 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்ட கட்சியே மீண்டும் ஆளுகின்ற வரலாற்றை உருவாக்கிய தலைவி புரட்சித்தலைவி அம்மா அவர்கள். சாதாரண தொண்டனையும் அரியணையில் அமர வைத்து அழகு பார்க்கும் கட்சி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். தமிழன் என்று சொல்வதற்கு ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது. ஸ்டாலின் என்பது தமிழ் பெயர் கிடையாது. தமிழ் பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது. முள்ளிவாய்க்காலில் 3 லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு காரணமாக இருந்தவர்கள் காங்கிரஸ், திமுகவினர்.

ஈழத்தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகளை அளித்தது திமுக. ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே வீட்டிற்கு சென்று விருந்தோம்பி விட்டு அவர் கொடுத்த பரிசுகளை வாங்கி வந்தது திமுக குடும்பம். தமிழ் துரோகத்தை தமிழ் இன துரோகத்தை எப்போதும் அண்ணா திமுக ஆதரிக்காது. கையில் எடுக்காது.

வரும் பொதுத்தேர்தலில் திமுகவை கருவறுக்கும் வகையில் திமுகவிற்கு வாக்காளர்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையாக பணியாற்றி அண்ணா திமுக வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும். சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் கழக வேட்பாளர் வெற்றி பெற்றார் என்ற சாதனையை நாம் படைக்க வேண்டும்.இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.