விண்ணை தொடும் கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றம்… இருட்டா கெடக்கும் வானத்துல ஒளிக்கீத்து கீத்து பொறக்குதம்மா..!

0
Follow on Google News

கொரோனாவின் தாக்கம் கொடிகட்டி பறக்கின்ற நிலையில் அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினை தொடர்ந்து இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு கட்டுமான பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு தமிழ்நாட்டில் உயர்ந்து வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது என எதிர்கட்சிகள் திமுக அரசு மீது பகிரங்கமாக குற்றசாட்டு வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கட்டுமானப் பொருட்களின் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது உயர்ந்துள்ளது. 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிமெண்ட் மூட்டை தற்போது 500 முதல் 520 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
இதேபோல் 3500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு யூனிட் ஜல்லி விலை தற்போது 5000 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது, 23,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 3000 செங்கல் தற்போது 27,000 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.

58,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு டன் கம்பி தற்போது 72,000 ரூபாய்க்கும், 3800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மணல் தற்போது 5200 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் கூறுகையில், ஊரடங்கு நடைமுறையில் உள்ளதன் காரணமாக பெரிய கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ள நிலையில் கட்டுமான பொருட்களின் விற்பனை வெகுவாக சரிந்துள்ளது. ஆனாலும் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகின்றது.

ஒருவேளை ஊரடங்கு முடிந்த பிறகு கட்டுமானப் பொருட்களின் தேவை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் கட்டுமானப் பொருட்கள் பதுக்கப்பட்டு அதன் காரணமாக செயற்கையான விலையேற்றம் உருவாகி இருக்கிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. இதன் காரணமாக கடன் வாங்கி சிறிய அளவில் புதிதாக வீடுகளை கட்டிக் கொண்டிருக்கின்ற வீடுகளை புதுப்பித்துக் கொண்டிருக்கின்ற வீடுகளை பழுது பார்த்துக் கொண்டிருக்கின்ற ஏழை, எளிய கிராமப்புற மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள். என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

கட்டுமான பொருட்களின் விலையேற்றம் பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர் அலையை ஏற்படுத்தியுள்ளது, பட்ஜெட் போட்டு வீடுகட்டும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் இந்த விலையேற்றத்தினால் பாதியிலே கட்டுமான பணியை நிறுத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார், தேர்தல் பிரச்சாரத்தின் போது இருட்டா கெடக்கும் வானத்துல, ஒளிக்கீத்து கீத்து பொறக்குதம்மா என திமுகவினர் பிரச்சார பாடல்களை மேற்கோள் காட்டி இது தான் அந்த ஒளிக்கீத்தா என கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடதக்கது.