பொள்ளாச்சி பாலியல் சம்பவம், அண்ணாமலை பற்றி போலியான தகவலை பரப்பிய பிரபல காங்கிரஸ் முக்கிய தலைவர் மன்னிப்பு கேட்டார்.!

0
Follow on Google News

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து தவறான கருத்தை தெரிவித்ததாக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை பற்றி பொய்யான செய்தியை பதிவு செய்து, பின்பு அண்ணாமலை செம்ம டோஸ் கொடுத்தவுடன், மன்னிப்பு கேட்டு அந்த பொய்யான செய்தியை நீக்கிவிட்டு விட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரின் செயல் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் முடிந்து விட்ட ஒன்று இனி அதைப் பற்றி பேசி ஒரு பயனும் இல்லை என, பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாக, தனியார் தொலைக்காட்சி பெயரில் தவறுதலாக சித்தரிக்கப்ட்ட ஒரு செய்தியை, காங்கிரஸ் கட்சி செய்திதொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் தனது சமூக வலைதளப்பாக்கத்தில் பதிவு செய்து, எழுவாய்! நீ இங்கிருந்து எழுந்திரு பயனில்லை!! நீ இங்கு இருப்பதால் எந்த பயனும் இல்லை செயப்படுபொருள்!!

உங்களால் தமிழகத்திற்கு உருப்படியாக செய்யப்படும் பொருள் ஏதாவது உண்டா? ஆகவே மறுபடியும் சொல்கிறேன் நீங்கள் எழுவாய் பயனிலை செயப்படுபொருள் என அமெரிக்கை நாராயணன் தெரிவித்திருந்தார், இந்த போலி செய்தியை பதிவு செய்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் அமெரிக்கை நாராயணனுக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக துணை தலைவர் அண்ணாமலை தனது சமூக வளைத்தளத்தில்.

உங்கள் அரை வேக்காடு முட்டாள்தனத்தினாலும், மற்றும் இது போன்று போலியான செய்திகளை வெளியிட்டுவருவது தமிழ் இனத்தை அவமதிக்கும் செயல் என்றும், உங்கள் முட்டாள் தனத்தை தெரிவிப்பதற்கு முன்பு, அந்த செய்தி உண்மையா என சரிபார்த்திருக்கலாம், கை நாற்காலி நிபுணர் என்ற சொல்லுக்கு உங்களை விட சிறந்த உதாரணத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.இந்த செயல் உங்களுக்கு வெட்கக்கேடானது என அண்ணாமலை பதிலடி கொடுத்திருந்தார்.

இதற்கு அமெரிக்கை நாராயணன் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு பதில் கொடுத்துள்ளார், அதில்,நான் இந்த செய்தியை உண்மையா என்று சோதித்திருக்க வேண்டும், அப்படி செய்யாதது எனது தவறு, எதிர்காலத்தில் இது போன்று தவறு நடக்காமல் கவனமாக இருப்பேன் என்றும், இந்த செயலுக்காக மன்னிப்பு கேட்பதாக அமெரிக்கை நாராயணன் தெரிவித்துள்ளார்.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .