மதுரையை தலைமையமாக கொண்டு உதயமாகிறது மோடி நற்பணி மன்றம்..! விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள்..

0
Follow on Google News

தமிழ்நாட்டில் மதுரையை தலைமையமாக கொண்டு பிரதமர் மோடி பெயரில் இளைஞர்களை ஒன்றிணைத்து உதயமாகிறது மோடி நற்பணி மன்றம். இது ஒரு அமைப்பு போன்று செயல்படும் என்றும், தற்பொழுது மதுரையில் தொடங்கப்படும் மோடி நற்பணி மன்றம், மதுரையை தலைமையமாக கொண்டு எதிர்காலத்தில் தமிழகம் முளுவதும் உள்ள மாவட்டங்களில் இந்த மோடி நற்பணி மன்றம் திறப்பு விழா காண இருப்பதாக கூறப்படுகிறது.

அரசியல் கட்சி போன்றே, இந்த நற்பணி மன்றத்தில் மாநிலம், மாவட்ட அளவில் தொடங்கி ஒன்றிய அளவில் வரை தகுதியான நபர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த நற்பணி மன்றம் தொடக்குவதற்கான வேலைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மோடி நற்பணி மன்றத்தில் இணைந்து செயல்பட அதிக அளவில் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நற்பணி மன்றம் மூலம் மத்திய அரசின் நல திட்டங்கள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மேலும் மக்கள் எளிதாக மத்திய அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறையை ஏற்படுத்தி தருவது போன்று, மேலும் பிரதமர் மோடி மற்றும் பாஜகவுக்கு எதிரான பிரச்சாரங்களை முறியடிப்பது போன்ற பல திட்டங்களுடன் மோடி நற்பனி மன்றம் செயல்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நற்பணி மன்றத்தில் அணைத்து வயதினருக்கும், அவரவர் பகுதியில் அவர்களுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கின் அடிப்படையில் அவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது, குறிப்பாக இந்த அமைப்பில் இணைய தற்பொழுது இருந்தே பெருமளவில் இளைஞர்கள் இணைந்து பணியாற்ற ஆர்வமுடன் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பெண்களிடம் எளிதாக மத்திய அரசின் சாதனைகளை கொண்டு செல்லும் விதத்தில், இதில் மகளீர் பிரிவும் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

செக்ஸ் தொல்லை பெண்ணிடம் பளார் வாங்கிய ஜேம்ஸ் வசந்த்…நீ இசைஞானி பற்றி பேசலாமா.?