சாமி நீங்க செய்தது சரி தான்…இளையராஜாவை பாராட்டிய ரஜினிகாந்த்..! எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

இசைஞானி இளையராஜா சமீபத்தில் பிரதமர் மோடி குறித்து தெரிவித்த கருத்துக்கு குறிப்பிட்ட ஒரு தரப்பினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்,’மோடியும் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மோடியின் முத்தலாக் தடை போன்ற திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்’ என்று இளையராஜா எழுதிய முன்னுரையில் தெரிவித்திருந்தார்.

இதற்கு ஒரு குறிப்பிட்ட தரப்பினர் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர், மத்திய அரசின் உயரிய விருதுக்காக தான் இளையராஜா இது மாதிரி கருத்து தெரிவித்து வருவதாகவும், மேலும் இளையராஜாவுக்கு ராஜியசபா உறுப்பினர் பதவி தருவதாக பாஜக ஆசை வார்த்தை கூறியிருக்கலாம் அதனால் தான் பிரதமர் மோடியை இளையராஜா புகழ்ந்து வருவதாகவும், மேலும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இளையராஜாவை வசை பாடி வந்தனர்.

ஆனால், இதற்கெல்லாம் தான் சற்றும் சளைத்தவன் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், என் மனதில் என்ன உள்ளதோ, உண்மையை சொல்வதற்கு தயங்க மாட்டேன். மற்றவர்களுடைய கருத்து வேறுமாதிரியாக இருக்கலாம். இது என்னுடைய கருத்து. நான் படத்தில் போட்ட டியூனை நல்லா இல்லை என்று சொன்னால் திரும்ப வாங்க மாட்டேன். என தான் தெரிவித்த கருத்தில் உறுதியாக இருந்து வருகிறார் இசைஞானி இளையராஜா.

இளையராஜா தன்னை பற்றி தெரிவித்த இந்த கருத்துக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்துள்ள நிலையில். இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் இசைஞானி இளையராஜாவை தொடர்பு கொண்டு மிக நீண்ட நேரம் பேசியுள்ளார் ரஜினிகாந்த். சமீப காலமாக இளையராஜா மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் அடிக்கடி நேரில் சந்தித்து ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி வருகின்றனர்.

அந்த வகையில் இளையராஜாவை தொடர்பு கொண்டு, சாமி உங்கள் கருத்து அற்புதம், ஒரு உண்மையை விமர்சனம் வரும் என்று தெரிந்தும் அந்த கருத்தை புத்தகத்தில் பதிவு செய்த உங்களுக்கு பெரிய சல்யூட் சாமி. என்று தெரிவித்த ரஜினிகாந்த், யார் என்ன வேண்டுமானால் பேசட்டும் அதை கருத்தில் கொள்ள வேண்டாம், நீங்க செய்தது சரியானது தான் என இளையராஜாவை தொடர்பு கொண்டு ரஜினிகாந்த் பாராட்டியதாக கூறப்படுகிறது.

நன்றி மறந்த ரஜினிகாந்த்… நடுதெருவில் நிற்கும் கே.எஸ்.ரவிக்குமார்..! அஜித்தை பார்த்து கற்று கொள்வாரா ரஜினி.?