அநாகரீகமான பேச்சின் புகழிடம் கருணாநிதி.! நாகரீக அரசியல் பற்றி பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கு.?முக்கிய பிரபலம் கடும் தாக்கு..

0
Follow on Google News

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யூ டியூபர் துரைமுருகன் அநாகரீமாக மேடையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திமுக அரசை விமர்சனம் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் துரைமுருகன். இதனை தொடர்ந்து துரைமுருகன் கைது செய்ய வேண்டும் என திமுக மத்தியில் கண்டன குரல் எழுந்தது, இதனை தொடர்ந்து துரைமுருகனை கைது செய்து சிறையில் அடைக்க ஆயத்தமாக இருந்து வந்தது திமுக அரசு.

இந்நிலையில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய துரைமுருகன். திமுக அரசை கடுமையாக தாக்கி பேசியிருந்தார். மேலும் காங்கிரஸ் கட்சியையும் அவர் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் அநாகரீகமாக பேசியதாக நேற்று துரைமுருகன் கைது செய்துள்ளார். இதற்கு திமுக தரப்பில் வரவேற்று, அநாகரீகமாக யார் பேசினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில் அநாகரீகம், அசிங்கத்தை பற்றி யார் பேசுவது என ஒரு தரப்பினர் கடந்த காலத்தில் திமுகவினர் அநாகரீகமாக, அசிங்கமாக பேசிய வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது. முந்திரி திருடியதற்கு ஒரு தோட்டத் தொழிலாளியை அடித்தது மட்டும் இல்லாமல் விஷம் வைத்து கொலை செய்துள்ளான் ஒரு திமுக MP. அவன் கைது இல்லை!

குடும்பத்தோடு ரவுடி தொழில் செய்யும் திமுக MP ஞானதிரவியம் கொலை வெறி தாக்குதல் நடத்துகிறான். அவனும் கைது இல்லை! ஆனால் திமுகவை கேள்வி கேட்டால் கைது? நாட்டிலேயே நாக்கு கூசாமல் பொது மேடைகளில் அசிங்கமாகப் பேச கற்றுக் கொடுத்ததே திமுக என்ற கட்சி தான். கருணாநிதி தலைவராகக் கொண்ட கட்சி நாகரீகமான அரசியல் பேச்சைப் பற்றிப் பேச என்ன தகுதியுள்ளது எனத் தெரியவில்லை. மொத்த அநாகரீகமான பேச்சின் புகழிடம் அமரர் கருணாநிதி என தெரிவித்துள்ளார்.