ஜோதிமணி – செந்தில் பாலாஜி இடையே உச்சகட்ட மோதல்.! கரூர் அரசியலில் இருந்து துடைத்து எறியப்படுகிறார் சொந்த ஊரில் 9 ஒட்டு வாங்கிய ஜோதிமணி..

0
Follow on Google News

கரூர் காங்கிரஸ் கட்சி எம்பி ஜோதிமணி கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக தயவில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். 2014 மக்களவை தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட ஜோதிமணி டெபாசிட் இழந்தார். மேலும் சொந்த ஊரிலேயே 9 ஓட்டு வாங்கிய ஜோதிமணிக்கு 2019ல் நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கியது தவறு என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோபண்ணா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சொந்த ஊரிலே வெறும் 9 ஓட்டுகள் மட்டும் வாங்கி 2014 தேர்தலில் டெபாசிட் இழந்த ஜோதிமணிக்கு மீண்டும் காங்கிரஸ் கட்சி சார்பில் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் கரூர் நாடாளுமன்ற தேர்தலில் ஜோதிமணி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர் தற்போது அமைச்சராக இருக்க கூடிய செந்தில் பாலாஜி.இதன் பின்பு கரூர் மாவட்ட அரசியல் களத்தில் ஜோதிமணியும் செந்தில்பாலாஜியும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்தனர்.

இந்நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்ற பின்பு, திமுக மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் என்கிற முறையில் கரூர் மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் செந்திபாலாஜிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் செந்திலாபாலாஜிக்கு நிகராக தனக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என ஜோதிமணி விருப்புவதாக கூறபடுகிறது.

இந்நிலையில் தன்னை விட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதால், சில முக்கிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஜோதிமணி புறக்கணித்து வந்ததாக கூறபடுகிறது. மேலும் செந்தில் பாலாஜி மீது அமலாக்க துறை விசாரணை நடைபெற்று வருவதால் விரைவில் அவர் சிறைக்கு சென்று விடுவார். அதனால் கரூர் மாவட்ட அரசியலில் செந்தில் பாலாஜி நிலைத்து நிற்க முடியாது என நெருக்கமானவர்களிடம் ஜோதிமணி தெரிவிக்க, இது செந்தில் பாலாஜி காதுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் ஒரு ஒன்றிய கவுன்சிலர், ஒரு மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் ஒன்பதாம் தேதி நடைபெற்றது. இதற்கான பரப்புரை நேற்று அக்டோபர் 7 ஆம் தேதியோடு முடிவடைந்தது. இதில் செந்தில் பாலாஜி தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால் ஜோதிமணி இதில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள ஜோதிமணி விருப்பம் தெரிவித்தும் திமுக தரப்பில் இருந்து புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அடுத்து வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டு தற்போது இருந்தே அதற்கான பணியை திமுக தலைமை அனுமதியோடு தொடங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் திமுக தயவில் வெற்றி பெற்று விட்டு நம்மிடமே ஆணவம் காட்டும் ஜோதிமணியை கரூர் அரசியலில் இருந்து துடைத்து எறியப்பட வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.