கணவனே ஆனாலும் சுயமரியாதை முக்கியம்..மகன் எழிலுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா பாக்யா.! அடுத்தது என்ன.?

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது மக்கள் மத்தியில் மிக பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. ஒரு உதவாக்கரை கணவன் கட்டிய மனைவி பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டு கஷ்டப்படும் போது மனைவிக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்க வேண்டிய கணவன் கட்டிய மனைவிக்கு தராத மரியாதை, கவுரவம், பணம் உதவி, ஒத்தாசை தராமல் கள்ளக் காதலிக்கு எல்லா வகையிலும் அவளுக்கு செய்கிறார்.

மேலும் மூத்த மகன் பெற்ற தாயை மதிப்பதில்லை இப்படி ஒரு குடும்பக் கதை இது வரை எந்த ஒரு சிரியலிலும் காட்டப்படாத ஓன்று. கோபி கேரக்டர் செய்யும் தவறுகளை ஒரு சிறிதளவு கசிய விட்டிருந்தால் வீட்டில் அமைதியாக இருந்திருப்பார், கோபி செய்யும் தவறுகள் வீட்டில் செய்யும் அராஜகம் எல்லாம் நான் என்ற ஆணவம், அதற்கு உறி அடிக்கும் அவர் அம்மா, மூத்த மகன் கஷ்டபட்டு காதலியை திருமணம் செய்து கர்பமாக்கி அதை கலைக்கச் சொல்லும் பணத்தாசை பிடித்த சுயநலமிக்க மகன் என கதை அமைந்த சீரியல் தான் பாக்கியலட்சுமி.

இந்நிலையில் தற்போது பாக்யா பெரும் பிரச்சனையில் இருப்பது குறித்து இந்த சீரியலை பார்த்த பாக்யா ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர், அதில் ஒருவர். பாக்கியலட்சுமி உன் கணவன் ஒரு உதவாக்கரை. நீ கணவன் குடும்பம் என்று எல்லாம் பார்த்து கொண்டு இருந்தாள் அது சரிப்பட்டு வராது. நீ உன் மனதை புரிந்து நடந்து கொள்ளும் மகன் எழில் உடன் வீட்டை விட்டு வெளியே வந்து விடு.

அப்போது தான் உன் மூத்த மகன் அத்தை உன் கணவன் இவர்கள் முக்கியமாக அப்போது தான் உன் அருமை புரியும். இனியும் அவர்களுடன் இணைந்து வாழ்வதை மறந்து விடு அப்போது தான் உண்னை அவர்கள் தேடி வருவார்கள் என ரசிகர் ஒருவர் அளித்த பதிலுக்கு, மற்றொரு ரசிகர் ஒருவர் அப்போ சீரியலும் அப்போதே முடிஞ்சிடும் என ஆதங்க பட, அதற்கு சீரியல் முடியாது ராதிகாவின் மறுபக்கத்தை கோபியும் அவரை நம்பிய அவரது குடும்பமும் சந்திக்க வேண்டாமா.

அதனால் சீரியல் தொடரும், பாக்யா கையில் தொழிலிருக்கு தாயுமானவனாய் தாங்க மகன் இருக்கிறான் எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்வார். பாக்கியா எழிலை தவிர அங்கு யாருமே உன்னை ஒரு மனுஷியாக மதிப்பதே கிடையாது. இது தான் நல்ல சந்தர்ப்பம் உன் மகன் எழிலை கூட்டிகிட்டு வெளியே போய் விடு. நன்றிகெட்ட மனிதர்கள் சகவாசம் வேண்டாம்.கணவனே ஆனாலும் சுயமரியாதை முக்கியம் என ரசிகர்கள் பாக்யாவுக்கு அறிவுறை வழங்கி வருவது குறிப்பிடதக்கது.