முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்…

0
Follow on Google News

முன்னாள் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோளை ஏற்று தமிழக போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றினார். இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில் குறிப்பது:
2020 அதிமுக ஆட்சியில் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கையை ஏற்று ஓய்வூதிய பலன்களை வழங்குவதற்காக, அதிமுக சார்பில் அன்று அந்த துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் சட்டமன்றத் தேர்தல் நன்னடத்தை விதிகள் காரணமாக அதிமுக நடைமுறைப்படுத்த இயலாமல் போய்விட்டது.

இதை காரணம் காட்டிய, ஓ. பன்னீர்செல்வம் தேர்தல் முடிந்த தற்போதைய நிலையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உடனடியாக ஓய்வூதிய பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த மாதம் மே31 தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் எனது அறிக்கையின் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

எனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட தமிழக முதலமைச்சர் ஜூன் ஜீன் 2ம் தேதி போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியிருக்கிறார். எனது வேண்டுகோளை நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.