இவர் தான் தமிழகத்தின் ராகுல் காந்தி.! தமிழகம் தாண்டி கேலி கிண்டலுக்கு ஆளான ஸ்டாலின் உளறல்.!

0
Follow on Google News

திமுக தலைவரின் மேடை பேச்சுக்கள் கேலி கிண்டலுக்கு உள்ளாவது வழக்கம், நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது இயக்குனர் வெங்கட் பிரபு கதை இல்லாமல் கூட திரைப்படம் எடுப்பார் ஆனால் அவருடைய தம்பி பிரேம்ஜி இல்லாமல் திரைப்படம் எடுக்கமாட்டார் என பேசினார், வெங்கட் பிரவும் அவருடைய தம்பி ப்ரேமாஜியையும் எப்படி பிரிக்க முடியாதோ அதே போன்று திமுக தலைவர் ஸ்டாலினையும் அவருடைய கையில் இருக்கும் துண்டு சீட்டையும் பிரிக்க முடியாது என கருத்து நிலவி வருகிறது.

இந்நிலையில் துண்டு சீட்டை பார்த்து கூட சரியாக பேசமுடியாமல் மேடைகளில் உளறும் ஸ்டாலின் பேச்சு பெரும் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது,ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட தெளிவாக பதில் கூறும், சுதந்திர தினம், குடியரசு தினம் தேதியை கூட சரியாக உச்சரிக்க முடியாமல் திணறும் ஸ்டாலின், பழமொழிகளை தவறுதலாக பேசுவது, என மீம்ஸ் க்ரியேட்டர்களுக்கு தொடர்ந்து கண்டெண்ட் கொடுத்து வருகின்றவர் ஸ்டாலின்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் மேடையில் பேசிய ஸ்டாலின, முதல் சுதந்திர போராட்டத்தை 1975ம் ஆண்டு புலித்தேவன் தொடங்கியதாக தவறுதலாக உளறியது இந்தியா முழுவதும் கேலி கிண்டலுக்குள்ளாகி உள்ளது, மேலும் ஸ்டாலின் இதை பேசும்போது துண்டு சீட்டை பார்த்து தான் பேசுகிறார், அப்படியானால் துண்டு சீட்டை பார்த்து படிப்பதில் கூட ஸ்டாலினுக்கு தடுமாற்றமா.? என கிண்டல் செய்து வருகின்றனர் வலைதளவாசிகள்.

இந்நிலையில் தமிழக பாஜக பொறுப்பாளரும், பாஜக தேசிய செயலாளருமான CT ரவி, சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் ஸ்டாலினின் உளறல் விடியோவை பகிர்ந்து, இவர் தான் தமிழகத்தில் உள்ள ராகுல் காந்தி, இவருக்கு என்ன தகுதி இருக்கிறது முதல்வராக வருவதற்கு என கர்நாடகாவை சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான CT ரவி குறிப்பிட்டிருப்பது, தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் ஸ்டாலினின் உளறல் கேலி கிண்டலுக்கு உள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.