பாலியல் ரீதியாக பாஜகவினர் மிரட்டல்.! நடிகர் சித்தார்த் பரபரப்பு குற்றசாட்டு.!

0
Follow on Google News

கொரோனா தொற்று இரண்டாம் அலை நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது, உலக நாடுகள் பல இந்தியாவுக்கான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர், மேலும் அந்த நாட்டை சேர்த்த யாரும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்த பட்டுள்ளனர், இந்தியாவில் இருந்து வரும் இந்தியர்களை அனுமதிக்க தடை விதித்தும் உலகில் சில முக்கிய நாடுகள் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றா குறை நீடித்து வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது, டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலக்களில் ஆக்சிஜன் பற்றா குறை இருப்பதாக அந்த மாநில முதல்வர்கள் தெரிவித்து வருகின்றனர், மத்திய அரசும் விமானம், ரயில் மூலம் நாடுமுழுவதும் ஆக்சிஜன் விநியோகம் செய்து வருகிறது

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடே இல்லை, அப்படி யாராவது செய்தி பரப்பினால் அவர்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்தார், மேலும் ஆக்சிஜன் போர் இன்னும் முடியவில்லை. மருத்துவமனைகள் ஏதாவது ஆக்சிஜன் பற்றாக்குறை என்று தவறான கோரிக்கையை முன்வைத்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மீண்டும் யோகி ஆதித்யநாத் எச்சரித்தார்.

இதற்கு பொய் சொல்வது சாமானிய மனிதனோ, சாமியாரோ இல்லை தலைவரோ யாராக இருந்தாலும் அறை விழுவதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ட்விட்டரில் நடிகர் சித்தார்த் தெரிவித்து இருந்தார், இதற்கு பாஜகவினர் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது, இதனை தொடர்ந்து இன்று தனது டிவீட்டர் பக்கத்தில் நடிகர் சித்தார்த், தமிழக பாஜக மற்றும் அதன் ஐடி பிரிவை சேர்ந்தவர்களால் தன்னுடைய தொலைபேசி காசியவிடப்பட்டிருப்பதாக தெரிவித்தவர்.

கடந்த 24 மணி நேரத்தில், எனக்கும் எனது குடுப்பதினாருக்கும் 500க்கு மேற்பட்ட அச்சுறுத்தல்கள் மற்றும் பாலியல் ரீதியான மிரட்டல்கள் வந்துள்ளன, அணைத்து எண்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதை போலீசாரிடம் ஒப்படைக்க இருப்பதாக தெரிவித்த சித்தார்த், இதற்கெல்லாம் நான் வாய் மூடி அமைதியாக இருக்க போவதில்லை என தெரிவித்துள்ளார்.