அதிரடியாக களம் இறங்கிய பாஜக…! பிரதமருக்கு எதிரான சு.வெங்கடேசன் ஆர்ப்பாட்டம் ரத்து..! காவல்துறைக்கு நன்றி தெரிவித்த பேராசிரியர்..

0
Follow on Google News

ஜனவரி 7ம் தேதியான இன்று மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்மாவட்ட எம்பிகளை ஒன்றிணைத்து பிரதமர் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் தலைமையில் மதுரை பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகில் நடக்க இருந்தது, இதற்கான ஏற்பாடுகளை சு.வெங்கடேசன் எம்பி செய்து வந்தார்.

இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக சார்பில் அதிரடி அறிவிப்பை அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். தமிழகத்துக்கு தேவையான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெறுவதற்கு தமிழக மக்கள் வாக்களித்து தென்மாவட்டத்தில் இருந்து எம்பிகளாக தேர்தெடுத்து டெல்லிக்கு அனுப்பினால்,

அங்கே டெல்லியில் ஒரு அணியையும் கழட்டாமல் இங்கே செயற்கையாக பிரதமர் மோடிக்கு எதிராக ஒரு பிம்பத்தை உருவாக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது அரசியல் அராஜகம் என தெரிவித்த பேராசிரியர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தை தமிழக அரசு அனுமதிக்கும் பட்சத்தில் அந்த ஆர்ப்பாட்டம் நடந்தும் அதே இடத்தில் அதே நேரத்தில் பாஜக சார்பில் ஆயிரக்கனக்கான தொண்டர்களுடன் சு.வெங்கடேசன் எம்பி தலைமையிலான ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என அதிரடியாக தெரிவித்த பேராசிரியர்.

மேலும் எனது தலைமையிலான ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுக்கும் பட்சத்தில். அனுமதியின்றி எங்கள் ஆர்ப்பாட்டம் திட்டவட்டமாக நடைபெறும் என பேராசிரியர் தெரிவித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சு.வெங்கடேசன் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு எதிராக அதே இடத்தில் இன்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் பாஜகவினர் மிக தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகள் எதிரெதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினால், என்ன நடக்கும் என பரபரப்பு நிலவிய நிலையில். சு.வெங்கடேசன் எம்பி தலைமையிலான ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து. சு.வெங்கடேசன் எம்பி தலைமையிலான ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனை தொடர்ந்து தனது தலைமையிலான ஆர்ப்பாட்டமும் நடைபெறாது என பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து பேராசிரியர் தெரிவித்ததாவது. பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் நடைபெற்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த சூழலில். அதே போன்ற நிலைமை தமிழகத்தில் வளரவிடாமல் தடுத்தும் நிறுத்தும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த சு.வெங்கடேசன் எம்பி தலைமையிலான ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்த தமிழக கவல் துறைக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாக பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.