திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா? கமல்ஹாசன் கடும் கோவம்..

0
Follow on Google News

கடந்த இரு தினகளுக்கு முன் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், அந்த வீடியோவில் நேர்மையாளராக இருப்பதற்காக சுரப்பா வேட்டையாடப்பட்டால், தாமும் தமது கட்சியும் சும்மா இருக்க மாட்டோம் என எச்சரிக்கை விடுத்திருந்தார் கமலஹாசன் , மேலும் சுரப்பா இன்னொரு நம்பி நாராயணனா?என்றும்.

மேலும் இது கல்வியாளருக்கும், அரசியல்வாதிகள் இடையேயான பிரச்னை அல்ல எனவும்; நேர்மையாக வாழ நினைப்பவருக்கும், ஊழல் பேர்வழிகளுக்கும் இடையேயான போர் என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். இதற்கு திமுக மற்றும் அதிமுக தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது திமுக தரப்பில் இருந்து கமல்ஹாசன் பாஜகவின் பி டீமாக செயல்படுவதாக கருத்து தெரிவித்து வந்தனர், அதிமுக அமைச்சர் கே.பி.அன்பழகன் கமல்ஹாசனுக்கு பதிலளிக்கையில்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா விவகாரத்தில் உண்மை நிலையை அறியாமல் நடிகர் கமல்ஹாசன் பேசி வருகிறார். கட்சி தொடங்கி தேர்தலை எதிர்கொள்ளும் நேரம் வந்துள்ளதால் அவர் இவ்வாறு பேசுகிறார் என தெரிவித்தார், இந்நிலையில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவாகி உள்ள நிலையில் கமல்ஹாசன் தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது.

வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை. திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா? தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம். ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன் என கமல்ஹாசன் கோபத்துடன் பதில் அளித்துள்ளார்.