பெரம்பலூர் பக்கமாக பிச்சை எடுத்து பிழைத்த ஆண்டிமுத்து ராசாவே நாவை அடக்கிப் பேசு.! வெளுத்து வாங்கும் அதிமுக.

0
Follow on Google News

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவில் திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசாவை கடுமையாக எச்சரிக்கும் வகையில் ஒரு பக்கத்தில் தலையங்கம் வெளியாகியுள்ளது, அதில்,, அட மானம்கெட்ட ராசா உன்னைப் போலவும், உன் தலைவனைப் போலவும் பிறரது கால் கழுவி பிழைத்தவர்கள் இந்திய அரசியலிலேயே கிடையாது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்று முப்பாத்தம்மன் கோயில் சுண்டலை விநியோகம் செய்வது போல தேசத்தின் பாதுகாப்பு தொடர்புடைய அலைக்கற்றை வைரத்தை நிலக்கரி விலைக்கு விற்று ஒன்றே முக்கால் லட்சம் ரூபாய் கோடியை கொள்ளையடித்தவன் நீ.

நாட்டின் பாதுகாப்பு ரகசியத்தையே பாகிஸ்தான் தொடர்புடைய பால்வாக்களுக்கும், சீனாவுக்கு ஆயுத கொள்முதல் செய்து கொடுக்கும் டெலிநார் எனப்படும் டெலி நார்வே என்னும் அயல்நாட்டு நிறுவனங்களுக்கெல்லாம் இந்தியாவின் அலைக்கற்றைகளை அடிமாட்டு விலைக்கு விற்று
பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்து கையும், களவுமாக மாட்டிக் கொண்ட களவாணி பய நீ.

நீயும், உன் களவாணி பார்ட்னர் கனிமொழியும் அடித்து வந்த கொள்ளை பணத்தை பிரித்துக் கொண்ட விதத்தை உலகமே கண்டு காறித் துப்பியது. அதிலும் குறிப்பாக கருணாநிதி பெயரில் தொலைக்காட்சி தொடங்க பால்வாவிடமிருந்து 214 கோடி ரூபாயை அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்காக லஞ்சமாக வாங்கி விட்டு சி.பி.ஐ. வந்து கதவு தட்டியதும் நாங்கள் வாங்கியது கடன் தான் என்று கதை அளந்ததும், வட்டியோடு அதனை திருப்பிக் கொடுத்து விட்டோம் என்று பித்தலாட்டம் செய்ததும் தொடங்காத தொலைக்காட்சிக்கு இந்தியா சிமெண்ட் சீனிவாசன் விளம்பர முன்பணம் கொடுத்தார் என்று பீலா விட்டதும், ராசாத்தி வீட்டு வேலைக்காரன் சரவணன் என்பவரது பெயரிலே டாடாவின் 700 கோடி மதிப்புடைய ஒல்டாஸ் கட்டடத்தை பட்டா போட்டதும் நாடறிந்த கதை அல்லவா?

இவ்வளவு ஏன்? நீ கொள்ளையடித்த விவரத்தையும், இன்றைய துண்டுச்சீட்டு ஸ்டாலின் தொழிலதிபர் பால்வாவை சந்தித்த செய்திகளையும் சி.பி.ஐ.யிடம் வாக்குமூலம் கொடுத்து விட்டு வந்த மறுநாளே பெரம்பலூர் சாதிக்கை கொன்று போட்டது நீ தான் என்று இன்று வரை உங்கள் கூட்டணியில் இருக்கிற வைகோ ஊடகங்களை கூட்டி வைத்து தன்னிடம் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாக திகில், பகீர் விவரங்களை வெளியிட்டாரே, அட மானம்கெட்ட ராசா அதற்காக நீ அந்த வைகோவுக்கு எதிராக வழக்கு போட்டாயா? இல்லை அந்த வைகோவை திமுக கூட்டணியில் சேர்க்க கூடாது என்று உப்பு உரைப்பு போட்டு சாப்பிடுபவன் நீ என்றால் அதனை சொல்லி இருக்க வேண்டாமா?

பெரம்பலூர் பக்கமாக பிச்சை எடுத்து பிழைத்த ஆண்டிமுத்து ராசாவே நாவை அடக்கிப் பேசு. இனியும் லட்சுமண ரேகையை மீறி உன் நாக்கு எல்லை தாண்டுமானால் உன் மானம் மரியாதை கப்பலேற்றப்படும். நீ நாலாந்தரமாய் பேசினால் அதற்கு நாற்பதாம் தரமாய் பதிலடி தருவதற்கு அண்ணா தி.மு.க.வில் ஒன்றும் ஆள் பஞ்சம் கிடையாது. எச்சரிக்கை, எச்சரிக்கை, இது இறுதி எச்சரிக்கை. இனியும் உன் நாக்கு எல்லை தாண்டுமானால் ஆண்டிமுத்து மகனே இனி உனக்கு அத்தியாயங்கள் ஆரம்பமாகும். ஜாக்கிரதை.