அரைவேக்காடு தனமாக கமல் பேசக்கூடாது.! ஸ்டாலின் ஒரு தத்தி.! அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்..

0
Follow on Google News

இந்தியாவின் அவமான சின்னம் ஆ.ராசா என்று மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- கமல்ஹாசன் யாருடைய அழுத்தத்தில் சூரப்பா தொடர்பான கருத்தை தெரிவித்தார் என தெரியவில்லை. அடிப்படை கொள்கைக்கு எதிராக கமல் உள்ளார். கமல் அறிவார்ந்த அரசியல்வாதியாக, சிந்திக்கத் தெரிந்த அரசியல்வாதியாக இருந்தால் அரசு புகாரை விசாரிப்பதில் என்ன தவறு என கேட்டிருக்க வேண்டும். அரைவேக்காடு தனமாக கமல் பேசக்கூடாது.

திமுகவின் தலைவருக்கு இரவல் மூளைதான் உள்ளது. திமுக தலைவர் யார் என்று பட்டிமன்றம் வைக்கலாம். திமுக கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர்தான். திமுக தலைவராக கருணாநிதி வயது மூப்பில் இருந்தபோது ஏன் ஸ்டாலினை முதல்வராக்கவில்லை அவர் ஒரு தத்தி. அதனால்தான் அவர் காலத்தில் அவரே முதல்வராகவும், தலைவராகவும் இருந்தார். திமுகவினர் இது பிகே கட்சியாகிவிட்டதே என்று மனம் வெதும்பி உள்ளனர்.இதன் வெளிப்பாடு நிச்சயமாக தேர்தலில் தெரியும்.

நெல்லிக்காய் மூட்டை கட்டை அவிழ்த்து விட்டால் எப்படி சிதறு ஒடுமோ அதுபோல மூட்டைக்குள் நெல்லிக்கனியாக திமுகவினர் உள்ளனர். மூட்டை அவிழ்க்கும்போது தான் தெரியும். இதுபோன்றா எங்கள் இயக்கம் உள்ளது.எங்களுக்கு லட்சியம் உள்ளது.தலைவர் மற்றும் அம்மாவின் கொள்கை உள்ளது. அவர்கள் பாதையில் நாங்கள் செல்வதால் எந்த தடுமாற்றமும் எங்களிடத்தில் இல்லை. தலைவர் என்றால் சுயமாக சிந்திக்கும் பக்குவத்தை பெற்றிருக்க வேண்டும். மக்கள் பிரச்சினையை ஆக்கப்பூர்வமாக தெரிவித்தால் நன்றாக இருக்கும்.ஆனால் எதற்கு எடுத்தாலும் எதிர்ப்பது.திமுகவின் பேச்சை காதுகொடுத்து கேட்கமுடியவில்லை. எங்களுக்கும் பேச தெரியும்.

நீங்கள் எப்படி தாக்குதல் நடத்தினாலும் அதைவிட நான்கு மடங்கு அதிகமாக எங்களால் தாக்க முடியும். எனவே இத்துடன் நிறுத்திக் கொள்வது திமுகவுக்கு நல்லது. தமிழ்நாட்டில் ஆரோக்கியமான நல்ல கருத்துகளை பரிமாறும் விதமாக எதிர்கட்சிகள் இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் அவமானச் சின்னமாகவும், இந்தியாவின் அவமான சின்னமாகவும் ஆ.ராசா இருக்கிறார். ஊழல் குறித்துப் பேச ஆ.ராசாவுக்கு தகுதி இல்லை. இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.