இன்னும் சட்டசபை தேர்தலுக்கு 5 மாதங்களே இருக்கும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தும் வைத்ததில் , பாமக , தேமுதிக போன்ற கட்சிகளுடன் பாஜக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, இருந்தாலும் திமுகவை பலவீன படுத்தாமல், வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்துவது கடினம் என்றும், குறிப்பாக திமுக முக்கிய புள்ளிகளை லாக் செய்தலே, தேர்தலில் அவர்களால் தீவிரமாக பணியாற்ற முடியாது, அந்த வகையில் திமுக முக்கிய புள்ளிகளை குறிவைத்து லாக் செய்யும் ஆப்ரேஷனை உடனே ஸ்டார் செய்யுங்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்சாவிடம் இருந்து உத்தரவு பறந்து இருக்கிறது.
இதில் திமுகவில் உள்ள 10 முக்கிய புள்ளிகள் பெயர் கொண்ட பட்டியல் அமித்ஷா மேசைக்கு சென்று இருக்கிறது. அதில் இடம்பெற்றுள்ள திமுக 10 முக்கிய புள்ளிகளின் பினாமிகள் குறித்து முழு விவரம், யார் யார் பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்து வைத்து இருக்கிறார்கள், குறிப்பாக தேர்தலுக்கு செலவு செய்வதற்காக பணத்தை யாரிடம் கொடுத்து பதுக்கி வைத்து இவர்கிறார்கள் என்கிற முழு விவரம் அமித்சா மேசைக்கு சென்ற பட்டியலில் இடம் பெற்று இருந்திருக்கிறது.

இந்நிலையில் புதியதாக ஒருவர் மீது அமலாக்கத்துறை சோதனை நடத்தி,வழக்கு பதிவு செய்து அவர்களை தேர்தலுக்கு தூக்கி உள்ளே வைப்பது அல்லது தேர்தலுக்குள் முழுமையாக முடக்குவது என்பது சவாலான விஷயம், ஆகையால் ஏற்கனவே அமலாக்க துறை சோதனையில் சிக்கிய நபர்களை தூசி தட்டி, அவர்கள் மீது உள்ள வழக்குகளை தீவிரப்படுத்தி தேர்தலுக்குள் தூக்கி வைக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது அமித்சா குழுவினர்.
அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் கே என் நேரு மற்றும் அவருடைய உறவினருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற அமலாக்க துறை சோதனையில் சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில் , கே என் நேருவுக்கு நெருக்கடி கொடுத்து அவர் போட்டியிடும் தொங்குதியை விட்டு வெளியே மற்றொரு தொகுதியில் திமுக வெற்றிக்காக வேலை செய்யக்கூடாது , அதையும் மீறி தீவிரமாக களப்பணி செய்தால், தேர்தலுக்கும் செந்தில் பாலாஜியை தூக்கி உள்ளே வைத்தது போன்று உள்ளே வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமலாக்க துறைக்கு, அமித்ஷா தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் அதி முக்கியமாக இடம் பெற்றுள்ளது செந்தில் பாலாஜி பெயர் தான் என கூறப்படுகிறது. செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி கொடுப்பதெல்லால் சரி பட்டு வராத, டாஸ்மாக் ஊழல், போக்குவரத்து ஊழல் என அனைத்தையும் தூசி தட்டி கைது செய்ய வேண்டும் அப்போது தான் , மற்ற திமுக முக்கிய புள்ளிகளுக்கு பயம் இருக்கும், தேர்தலில் தீவிரம் காட்டினாள் அமலாக்க துறை நெருங்கும் என்கிற அச்சத்தில் முடங்கி விடுவார்கள் என திட்டமிட்டுள்ளது டெல்லி மேலிடம்.
அடுத்ததாக திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் மணல் கொள்ளையில் சிக்கி இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் அமலாக்க துறை கைவசம் உள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும், டெல்லி மேலிடத்திடம் திரைமறைவில் தொடர்பு வைத்து கொண்டு தன்னை காப்பாற்றி கொள்ள முயற்சி வருகிறார் என்றும், இருந்தாலும் அமைச்சர் துறைமுருகன் வயது காரணமாக அவருடைய மகன் கதிர் ஆனந்தை குறி வைத்துள்ளதை டெல்லி மேலிடம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
இதே போன்று ஏற்கனேவே ஊழல் வழக்குகளில் சிக்கியுள் அமைச்சர் பொன்முடி, மற்றும் அனிதா ராதாகிருஷ்னன் ஆகியோர் பெயர்கள் உட்பட டாப் 5 திமுக முக்கிய புள்ளிகளை குறிவைத்து வரும் தேர்தலுக்குள் முடக்க வேண்டும் என அமலாக்கத்துறை க்கு அமிட்ஷா தரப்பில் இருந்து அதிரடி உத்தரவு பறந்து இருப்பதாகவும், அமலாக்கத்துறை யும், இவர்களுடைய வழக்குகளை தூசி தட்ட தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

