நீலகிரி ஹெலிகாப்டர் விபத்து… முப்படைத் தளபதி பிபின் ராவத் நிலைமை ஏன் ஆனது?

0
Follow on Google News

நீலகிரி அருகே உள்ள குன்னூர் பகுதியில் சென்ற இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் அருகே இந்திய ராணுவ விமானம் சென்றபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு விமானம் கீழே விழுந்து தீப்பிடித்துள்ளது. இதில் முதல் கட்டமாக 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது.

ஆனால் அடுத்த கட்ட தகவலில் பயணித்த 14 பேரில் 11 பேர் உயிரிழந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த விமானத்தில் இந்திய முப்படைத் தளபதி பிபின் ராவத்தும் அவரது குடும்பத்தினரும் பயணித்தது உறுதியான நிலையில் அவர்களின் நிலைமை என்ன ஆனது என்பது இப்போது வரை தெரியவில்லை.

இந்த விபத்தை அடுத்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சின் குன்னூர் விரைய உள்ளார். அதே போல தமிழக முதல்வர் மு க ஸ்டாலினும் இன்று தனி விமானம் மூலமாக குன்னூர் செல்ல உள்ளார்.