விளம்பர அரசியல் வெறுப்படைய செய்கிறதாம்..! அரசியல் வாதியாக ஜோதிமணி வருந்துகிறாராம்..! ஏன் இந்த வருத்தம் தெரியுமா.?

0
Follow on Google News

தொடர்ந்து பெய்ந்து வரும், கனமழை காரணமாக தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் மக்கள் கடும் சிரமத்தில் உள்ளனர், தலைநகர் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. தொடர் மழை காரணமாக குறிப்பிட்ட சில மாவட்டக்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சட்டமன்ற ,நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலையின் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கே என மக்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், கரூர் தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வழக்கம் போல் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள பாஜக தலைவர்களை சமூக ஊடகத்தில் கேலி, கிண்டல் செய்து பொழுதை கழித்து வருவதும், அவருக்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருவதும் தொடர்கிறது.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார், பாஜக சார்பில் பல பகுதிகளில் உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, மேலும் ஹெல்ப் லைன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படகு மூலம் அண்ணாமலை பார்வையிடும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள எம்பி ஜோதிமணி.

அண்ணாமலை மழை வெள்ளத்தால் பதிக்கப்பட்டுள்ள மக்களிடம் குறைகளை கேட்டு கொண்டிருக்கும் போது, அங்கே புகைப்படம் எடுப்பவரகள், இதை எப்படி புகைப்படம் எடுக்க வேண்டும் என அவர்களுக்குள் பேசி கொண்டதை அண்ணாமலையுடன் தொடர்புபடுத்தி பதிவு செய்துள்ளார் ஜோதிமணி அதில், மக்கள் மழை,வெள்ளத்தோடு போராடிக்கொண்டிருக்கும்போது, அவர்கள் துயரில் ஷூட்டிங் நடத்தி விளம்பரம் தேடுவது என்ன மாதிரியான மனநிலை?!

அரசியல் அவலத்தின் உச்சகட்டம் இது. பாஜகவின் விளம்பர அரசியல் வெறுப்படைய செய்கிறது. ஒரு அரசியல்வாதியாக வருந்துகிறேன். என ஜோதிமணி பதிவுக்கு. தமிழக முதல்வர் மழை வெள்ளத்தில் ஆய்வு செய்துவரும் புகைப்படத்தை பகிர்ந்து இது எந்த மாதிரியான அரசியல் என கேள்வி எழுப்பி வரும் நெட்டிசன்கள், சமூக வலைதளத்தில் கேலி கிண்டல் செய்து பொழுதை கழிக்காமல், ஆக்கப்பூர்வமாக ஏதவாது மக்களுக்கு செய்யுங்கள் என ஜோதிமணிக்கு பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடதக்கது.

அய்யா வைகோ ஆளை காணோம்…..அண்ணன் திருமா ஓடி போனார்……காங்கிரஸ் கட்சி பல்லுல சுளுக்கு…..கம்யூனிஸ்ட் கட்சி தலைமறைவு….