விஜய் வீட்டில் வெடுகுண்டு… காவல்துறைக்கு வந்த தொலைபேசி அழைப்பால் பரபரப்பு!

0
Follow on Google News

நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த போலி செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் இன்று இருக்கும் உச்ச நடிகர்களில் விஜய்யும் ஒருவர். அவரின் கடந்த சில படங்கள் விமர்சன ரீதியாக கழுவி ஊற்றப்பட்டாலும் வசூல் சாதனைகளைப் படைத்து வருகின்றன. அவ்வப்போது அவர் படம் மற்றும் அரசியல் வருகை சம்மந்தமாக சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

இந்நிலையில் இந்நிலையில் நடிகர் வசிக்கும் நீலாங்கரை வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்களோடு விஜய்யின் இல்லத்துக்கு சென்று று சோதனையில் ஈடுபட்டனர்.

ஆனால் சோதனையில் சந்தேகத்துக்கு இடமாக எதுவும் கிடைக்கவில்லை. விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் வீடுகளுக்கு போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது சமீபகாலமாக அதிகமாகி வருகிறது.