தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் ரகசிய ஒப்பந்தம்…அட இந்த டீலிங் கூட நல்லா இருக்கே.! என்ன ஒப்பந்தம் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் இருவரும் பிரிவதாக அறிவித்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிரிந்த தம்பதியினரை மீண்டும் இணைத்து வைக்க தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்கும் நெருக்கமானவர்கள் முயற்சியில் ஈடுபட்டு அது தோல்வியில் முடிந்தது. இதனை தொடர்ந்து பிரிந்த தம்பதியினர் குடும்ப நல நீதிமன்றத்தில் சட்டப்படி வழக்கு பதிவு செய்து விவாகரத்து பெறுவார்களா, அதற்கான முயற்சிகளில் இவர்கள் ஈடுபட்டு வருகிறார்களா என்கிற பல கேள்விகள் எழுந்துள்ளன.

ஐஸ்வர்யா – தனுஷ் தம்பதியினர் ஜனவரி மாதம் 17ம் தேதி நள்ளிரவு பிரிவதாக அறிவித்த போது இருவரும் ஹைதராபாத்தில் உள்ள ஒரே ஓட்டலில் தனி தனி அறையில் இருந்துள்ளார்கள், இவர்கள் பிரிவதாக அறிவித்த பின்பு அடுத்த ஒரு வாரம் வரை இருவரும் ஒரே ஓட்டலில் தனி தனி அறையில் தான் இருந்து வந்தனர், ஆனால் இவர்கள் பிரிவதாக அறிவிப்பதற்கு முன்பு சுமார் மூன்று நாட்கள் வரை அவர்கள் தங்கி இருந்த ஓட்டலில் ஒரே அறையில் தான் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு உச்சக்கட்டத்தை அடைந்து, கடும் வார்த்தை போருக்கு பின்பு தான் ஒரே அறையில் இருந்தவர்கள் தனி தனி அறையில் தங்க தொடங்கியுள்ளனர். இவர்கள் இருவரும் பேசி பிரிவதாக முடிவு செய்வதற்க்கு முன்பு இருவரும் சில ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், இந்த ரகசிய ஒப்பந்தம் என்ன என்பது பற்றி தற்போது கசிந்துள்ளது, இது குறித்து விசாரித்ததில்,

தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக முடிவு செய்த போது, உன்னுடைய போக்கில் நீ போ.. என்னுடைய போக்கில் நான் போகிறேன், இருவருக்குள் ஒருவருக்கொருவர் தடையாக இருக்க கூடாது, குழந்தைகள் இருவரின் நலன் கருதி விவாகரத்து செய்ய வேண்டாம், மேலும் விவகாரத்து வரை நீதிமன்றம் சென்றால் அடிக்கடி நீதிமன்றம் செல்ல நேரிடும் இதனால் குறிப்பாக தனுஷ் நடிக்கும் படங்களில் படப்பிடிப்பு பாதிக்கப்படும் என்பதால்,

மேலும் விவாகரத்து பெற்ற நடிகர்கள் அணைவரும் சினிமாவில் காணாமல் போனது தான் அதிகம், இதனால் தனது மார்க்கெட் பாதிக்கப்படும் என்பதால் நீதிமன்றம் செல்ல வேண்டாம் என தனுஷ் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஐஸ்வர்யாவும் சம்மதம் தெரிவிக்க, இனிமேல் உன் விஷயத்தில் தலையிடமேட்டேன் அதே போன்று எனக்கு பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்து கொள்கிறேன் நீ அதில் தலையிட வேண்டாம் என ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

இப்படி இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசி சில கோரிக்கைகளுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து பிரிந்துள்ள நிலையில், சமீபத்தில் இயக்குனர் பாலா மற்றும் அவரது மனைவி முத்துமலர் இருவரும் ரகசிமாக குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து விவாகரத்து பெற்று பிரிந்தது போன்று, தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதற்கு வாய்ப்பு இல்லை என்றும், ஏனென்றால் ஏற்கனவே இருவரும் ரகசிய ஒப்பந்தம் செய்து தான் பிரிந்துள்ளார்கள், அவர்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருவருக்கும் நீதிமன்றம் செல்ல விருப்பம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குஷ்புவை பார்த்து திருந்துவார்களா சூர்யா குடும்பத்தினர்..! சத்தமில்லாமல் என்ன செய்து வருகிறார் குஷ்பு தெரியுமா.?