விராட் கோலியை சவால் விட்டு தூக்கிய தமிழக வீரர்…யார் இந்த தமிழன் மணிமாறன்…

0
Follow on Google News

ஒரு கிரிக்கெட் வீரருக்கு தான் அடிக்கும் முதல் செஞ்சுரி எந்த அளவிற்கு உற்சாகத்தை கொடுக்குமோ, அதே அளவிற்கு தான் எடுக்கும் முதல் விக்கெட் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அதுவும் விராட் கோலி போன்ற ஒரு நட்சத்திர ஜாம்பவானின் விக்கட்டை எடுக்கும் பொழுது அது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும். அப்படி நடப்பா ஆண்டு ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் விக்கெட்டை எடுத்து அசத்தியிருக்கிறாள் தமிழ்நாட்டைச் சேர்ந்த சித்தார்த்.

லக்னோ அணிக்காக விளையாடிய சித்தார்த் தனது முதல் போட்டியிலேயே முதல் விக்கெட்டாக விராட் கோலியின் விக்கெட்டை எடுத்து கலக்கி இருக்கிறார். பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் 182 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களம் இறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் டு பிளஸ்சிஸ் ஆகியோர் களமிறங்கினர். அப்போது பவுலிங் செய்த சித்தார்த், முதல் ஓவரில் பெங்களூரு அணிக்கு மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். அவை தொடர்ந்து அவர் வீசிய இரண்டாவது ஓவரில் பெங்களூரு அணி 12 ரன்கள் குவித்தது. பின்னர் சற்று சுதாரித்துக் கொண்ட சித்தார்த், அவர் வீசிய மூன்றாவது ஓவரின் இரண்டாவது பந்தில் ஆப்சைடாக வீசினார்.

இந்த பந்தை எதிர்கொண்ட விராட் கோலி பேட்டை தூக்கி அடிக்கவே பந்து பறந்து சென்று தேவ்தத் படிக்கலின் கைகளில் உட்கார்ந்து கொண்டது. இது சித்தார்த் அவர்களுக்கு ஐபிஎல்லில் முதல் விக்கெட்டாக, அதுவும் விராட் கோலியின் நட்சத்திர விக்கெட் ஆகவும் அமைந்தது. சரி யார் இந்த மணிமாறன் சித்தார்த். இவரது ஆரம்ப கால கிரிக்கெட் வாழ்க்கை என்ன என்பதை பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம்.

இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 2020 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் 2021 ஆம் ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் உறுப்பினராக இருந்தார். அதன் பிறகு அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கு பெறவில்லை. இருப்பினும் கடந்த ஆண்டு டிஎன்பிஎல் தொடரில் கோவை அணிக்காக விளையாடினார்.

அப்போது மொத்தம் ஒன்பது போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை 5.61 பந்து வீச்சு எக்கானமியில் எடுத்தார். தொடர்ந்து டிஎன்பிஎல் தொடரில் அபாரமாக ஆடி வந்ததால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 2019ஆம் ஆண்டில் தமிழக அணிக்காக சையத் முஸ்தாக் அலி டிராபியில் அறிமுகமாகி அந்த சீசனில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரது அபார திறமை மீது நம்பிக்கை வைத்த தினேஷ் கார்த்திக், பவர் பிளேவில் முதலில் பந்து வீச இவரை பரிந்துரைத்திருக்கிறார்.

அதே ஆண்டில் பஞ்சாப் அணிக்காக அறிமுகமாகி ஏழு முதல் தர ஆட்டங்களில் விளையாடி இரண்டு நான்கு விக்கெட்டுகள் உட்பட 27 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். துபாயில் நடைபெற்ற ஏலத்தில் கலந்து கொண்ட இவர், அடிப்படை விலையான 20 லட்சத்திலிருந்து 2.40 கோடி ரூபாய்க்கு இறுதியாக லக்னோ அணி வரை தேர்வு செய்தது. இவரை ஏலத்தில் எடுக்கும் போட்டியில் பெங்களூர் அணியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தனது சிறு வயதில் இந்தோனேஷியாவில் வாழ்ந்து வந்திருக்கிறார். அதன் பிறகு எட்டு வயதில் இந்தியாவிற்கு வந்த அவர், மிக ஆர்வமாக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்திருக்கிறார். இப்போ அனுப்பலாம் ஆல் ரவுண்டராக இருக்க ஆசைப்பட்ட சித்தார்த் இப்போது சுழற் பந்து வீச்சளராக வலம் வருகிறார். பெங்களூர் அணியுடன் மோதுவதற்கு முன்பு, கோலியின் விக்கெட்டை பெற முடியுமா என்று சித்தார்த்திடம் கேட்ட போது, அதற்கு எஸ் சார் என்று தமிழன் மணிமாறன் சித்தார்த் தலையை அசைத்து பதில் அளித்து இருந்த நிலையில், சொன்னது போன்று சவால் விட்டு விராத் கோலி விக்கெட்டை எடுத்துள்ளார் மணிமாறன் சித்தார்த்.