பெண்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய விக்ரமன்… பணம் பறித்ததாக பெண் குற்றசாட்டு…

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் மூன்று போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர், இந்த மூன்று போட்டியாளர்களில் அஷீம், விக்ரமன், சிவின் ஆகிய மூவரில் யாரை தேர்ந்தெடுப்பது என்கின்ற கடும் போட்டி நிலவி வந்த நிலையில் , பிக் பாஸ் நிகழ்ச்சியில், வாக்கெடுப்பு மூலம் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள், அந்த வகையில் மக்கள் அதிக வாக்குகள் அளித்து அசீம் வெற்றி அடைய செய்துள்ளார்கள்,

விக்ரமன் வெற்றி பெறுவார் என என எதிர்பார்க்க பட்ட நிலையில், விக்ரமன் அரசியல் சார்ந்த கருத்துக்களை மக்கள் ஏற்று கொள்ள வில்லை என்றும், அதே நேரத்தில் அசீம் பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு கேம் ஷோ அந்த விதத்தில், எதோ ஒரு வகையில் மக்கள் மனதில் அசீம் இடம் பிடித்து இருந்ததால் தான் மக்கள் அசீமை வாக்களித்து வெற்றி அடைய செய்துள்ளார்கள்.

இந்நிலையில் பிக்பாஸ் புகழ் விக்ரமன் மீது, தலித் செயற்பாட்டாளரும், வழக்கறிஞருமான கிருபா முனுசாமி பரபரப்பு குற்றசாட்டுகளை வைத்தவர், அதற்கான சில ஆதாரங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வழக்கறிஞராக உள்ள பணிபுரியும் கிருபா முனுசாமி என்பவர், தற்போது மத்திய அரசின் உதவியுடன் லண்டனில் சட்டத்துறையில் முனைவர் ஆராய்ச்சி படிப்பினை மேற்கொண்டு வருகிறார்.

என்னை மனைவியாக உணர வைத்து பணம் செலவு செய்ய வைத்த விக்ரமன், என்னுடைய கிரெடிட் கார்டில் ரூ.80 ஆயிரம் செலவு செய்தது பற்றி கேட்டபோது சாதி ரீதியாக இழிவுப்படுத்தினார் என தெரிவித்துள்ள கிருபா முனுசாமி, மேலும் தலித் பெண்ணான என்னை வாழ்க்கையை கொச்சைப்படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்.

இதுவரையிலும் 12 லட்சத்திற்கு மேல் பணம் பறித்துள்ளதாகவும் , விக்ரம் தன்னிடம் செய்யும் அரசியல், பண மோசடி தொடர்பாக கிருபா முனுசாமி கேள்வி கேட்ட போது, விக்ரமன் என்னை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும்,மேலும் அவரை விட்டு விலகும் நேரத்தில் எல்லாம், தன்னிடம் வந்து கெஞ்சுவது, இனி சரியாக நடப்பேன் என விக்ரமன் தெரிவித்ததாக கூறும் கிருபா, மேலும் அவர் கூறுகையில், இருந்தாலும் அவரின் குணம் தொடர்ந்து மாறாமல் இருந்தது. 2 வருடமாக அவருடன் உறவில் இருந்த நான் விக்ரமனுக்கு சப்போர்ட் செய்வதை நிறுத்தினேன்.

அவர் திருப்பி தருவதாக கூறிய பணத்தை கேட்ட போது என்னை பிளாக் செய்தார். 3 மாத முயற்சிக்குப் பின் பிக்பாஸ் செல்வதற்கு முன் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கேட்டார். அதன்பின் நாங்கள் ஒன்றாக இருந்தோம்.பிக்பாஸ் முடிந்து எங்கள் காதல் தொடர்ந்தது. மேலும் தன்னுடைய மேனேஜர் என சொல்லும் பெண்ணுடன் நெருக்கமாக இருந்தார். என்னை ஏமாற்றினார் என கண்டுபிடித்தேன். நான் கான்பிரன்ஸ் கால் செய்து நேரடியாக கேட்டபோது உண்மையை ஒப்புக் கொண்டார்.

அந்த பெண்ணுடன் காதலில் விக்ரமன் ஒன்றரை ஆண்டுகாலாமாக இருந்ததை நான் அறிந்தேன். அதன் பின்னர் விக்ரமன் தன்னுடைய முன்னாள் காதலிகள் என்று சொன்ன 15க்கும் மேற்பட்ட பெண்களிடம் நான் பேசினேன். அதில் விக்ரமன் பலரை ஏமாற்றியது எனக்கு தெரியவந்தது. அவர்களில் பலருக்கு இப்போது திருமணம் ஆகிவிட்டது. அதே போல் சில ஆண்களை கூட இவர் ஏமாற்றி உள்ளார்.

மேலும் தன்னிடம் இருந்து ஐபோன், ஆப்பிள் வாட்ச், என பல பொருட்களை வாங்கிய விக்ரமன் அத்துடன், யூடியூப் சேனல் நடத்தப்போவதாக கூறி ஆப்பிள் லேப்டாப்பை வாங்கிதரும்படி விக்ரமன் தொல்லை கொடுத்தார். ஆனால் அவர் அதை தொடங்க கூட இல்லை. விக்ரமன் தனது சொந்த காருக்கான டவுன் பேமெண்ட் மற்றும் இ.எம்.ஐகளை என்னிடம் இருந்து கட்டயப்படுத்தி வாங்கி கொண்டார் என விக்ரமன் மீது கிருபா முனுசாமி பரபரப்பு குற்றசாட்டுகளை வைத்துள்ளார்.