இனிமே மும்பை தான் வாழ்க்கை… சூர்யாவை கட்டுக்குள் கொண்டு வந்த ஜோதிகா..

0
Follow on Google News

கடந்த சில வருடங்களாகவே கணவன் சூர்யா சம்பாதிக்கும் கோடிக்கணக்கான பணத்தை தன்னுடைய பூர்விகமான மும்பையிலே முதலீடு செய்ய வைத்து வந்துள்ள ஜோதிகா, இதனால் பெரும் லாபத்தை சம்பாரித்து வந்த சூர்யா, பெரும்பாலும் சென்னையை விட மும்பையில் தான் குடும்பத்துடன் அதிக நாட்கள் கடந்த சில வருடமாக தங்கி வந்தார்.

இந்நிலையில் சென்னையில் படித்து கொண்டிருந்த இரண்டு குழந்தைகளையும் மும்பையில் உள்ள பள்ளியில் சேர்த்து, குடும்படுத்துடன் மும்பையில் நிரந்தரமாக குடியேறியுள்ளார் சூர்யா. மேலும் நடிகர் சூர்யா சென்னையில் அரண்மனை போன்று மிகப் பெரிய வீடு ஏற்கனவே உள்ள நிலையில், மும்பையில் குடியேறியுள்ள சூர்யா, ஏற்கனவே மும்பையில் சூர்யாவுக்கு வீடு இருக்கையில் மேலும் மும்பையில் சுமார் 68 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு புதிய டபுள் எக்ஸ் வீடு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ள சூர்யா நிரந்தரமாக மும்பையில் வசிப்பது என முடிவு செய்துவிட்டார் என தகவல் வெளியானது.

இந்நிலையில் ஹிந்தி சினிமாவில், ஒரு வித மாஃபியா உண்டு, அந்த மாஃபியா கும்பலை தாண்டி புதியதாக யாரும் இந்தி சினிமாவில் வளர முடியாது, ஜோதிகாவின் தாய் – தந்தை இருவரும் இந்தி சினிமா துறை பின்னணியில் உள்ளவர்கள், அந்த வகையில் இந்தி சினிமா மாஃபியா கும்பல் என்று கூறப்படும் அந்த குறிப்பிட்ட தரப்பினருடன் ஜோதிகா குடுப்பதினாருக்கு நெருக்கிய தொடர்பு உண்டு,

அந்த வகையில் தன்னுடைய கணவர் சூர்யாவை இந்தி படங்களில் தொடர்ந்து நடிக்க வைத்து பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இடம் பெற செய்ய வேண்டும் என்கிற திட்டத்துடன், இந்தி சினிமாவில் சூர்யாவை நடிக்க வைக்கும் முயற்சியில் கடந்த சில மாதங்களாகவே ஜோதிகா ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டு வந்தது, ஹிந்தி சினிமாவில் சூர்யா நடிக்க இருப்பதாலே புதியதாக தமிழ் சினிமாவில் சூர்யா கமிட்டாகாமல் இருந்து வருவதாக தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் கமிட்டாய் இருந்தார். ஆனால் வெற்றிமாறனுக்கு அடுத்தடுத்து கமிட்மென்ட் உள்ளதால், வாடிவாசல் படம் தொடுக்குவதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை. இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தை முடித்துவிட்டு அடுத்து ஹிந்தி பக்கம் பிசியாக போகிறார் சூர்யா.

தமிழ் சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி மிக பெரிய வெற்றியை பெற்ற படம் சூரரை போற்று, இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் சுதாகொங்கரா , இந்த படத்தில் கேமியோ ரோல் பண்ண இருக்கும் சூர்யா, இதனால் இந்தியில் ஹீரோவாக என்ட்ரி கொடுப்பதற்கு முன்பு, கேமியோ ரோல் இந்தி சினிமா ரசிகர்ககள் மத்தியில் தனக்கு ஒரு அறிமுகம் கிடைக்கும் என எதிர்பார்த்து கேமியோ ரோல் செய்கிறார் சூர்யா.

மேலும் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் கேமியோவாக சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் மிக பெரிய அளவில் பேசப்பட்டது, அதே போன்று இந்தியில் சூரரை போற்று படத்தில் சூர்யாவின் கேமியோ ரோல் பேசப்படும் என எதிர்பார்க்க படுகிறது. மேலும் இந்தியில் ஹீரோவாக நடிக்க பல ஹிந்தி இயக்குனர்களிடம் சூர்யா கதை கேட்டு வந்த நிலையில், தற்பொழுது ஹிந்தியில் ஹிட் படம் கொடுத்த முன்னணி இயக்குனர் படத்தில் கமிட்டாகி உள்ளார் சூர்யா.

இந்நிலையில் ஹிந்தியில் சூர்யா நடிக்க இருக்கும் படம் மிக பெரிய வரவேற்பை பெற்று, அடுத்தடுத்து ஹிந்தியில் அவருக்கு பட வாய்ப்புகள் பிரகாசமாக அமையும், இதனால் தமிழ் சினிமாவில் நடிப்பதை பெரும்பாலும் குறைத்துக் கொள்வார் என்றும், அந்த வகையில் ஜோதிகாவின் முழு கட்டுப்பாட்டில் மும்பையிலே பெட்டி பாம்பாக அடங்கிவிட்டார் என்கின்றது சினிமா வட்டாரங்கள்.