மருத்துவமனையில் அஜித்துக்கு சிகிச்சை… அஜித் மூலையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை..

0
Follow on Google News

நடிகர் அஜித்குமார் திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அட்மிட் ஆன தகவல் வெளியானது. இதனால் அஜித்துக்கு என்ன ஆச்சு என்கின்ற ஒரு பரபரப்பு நிலவி வரும் நிலையில், அஜித் சாதாரண பரிசோதனைக்காக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், சிகிச்சை முடித்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிவிட்டார் என வெளியான தகவல் உண்மையில்லை என கூறப்படுகிறது.

அந்த வகையில் அஜித் தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் தான் உள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்துக்கு என்னாச்சு என மருத்துவமனை வட்டாரங்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில் அஜித் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார் என்கிற சில தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அஜித்தின் ஹார்ட்ல் உள்ள சிறிய பிரச்சனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என ஒரு தரப்பு தெரிவித்து வருகிறது.

ஆனால் அஜித்துக்கு அடிக்கடி சமீப காலமாக சிறிய தலைவலி இருந்து வந்துள்ளது, இப்படி அடிக்கடி வரும் தலைவலியை சரி செய்ய சின்ன சின்ன சிகிச்சையை மேற்கொண்டு வந்துள்ளார் அஜித். இந்நிலையில் எதற்கு அடிக்கடி தலைவலி பிரச்சனை வருகிறது என பரிசோதனை செய்ய அஜித் மருத்துவமனை சென்றுள்ளார், அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அஜித்துக்கு தலையில் சிறிய கட்டி அல்லது ஒரு வித வீக்கம் போன்று உள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் பயப்படும் படி ஓன்று இல்லை, முலையில் உள்ள கடியை எளிதாக ஒரு சிறிய சர்ஜரி மூலம் சரி செய்து விடலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் அதற்காக தொடர்ந்து மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் மருத்துவர்கள் ஆலோசனைப்படி அஜித் மருத்துவமனையில் அட்மிட்டாகியுள்ளாரர்.

இந்நிலையில் அஜித்துக்கு இது போன்ற பிரச்சனைகள் வருவதற்கு என்ன காரணம் என்பது பற்றி விசாரித்ததில், அஜித் எப்போதும் ஒரு இறுக்கமான முகத்துடன் இருக்க கூடியவர். பொதுவாகவே கலகல என்று அனைவரிடமும் பேசி சிறிது மகிழ கூடியவர்களுக்கு தலைவலி போன்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் மிக குறைவு. ஆனால் அஜித் அப்படி பெரும்பாலும் இருக்க கூடியவர்கள் கிடையாது, அதனால் தான் அவருக்கு இது போன்ற பிரச்சனை வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அஜித்துக்கு தற்பொழுது ஏற்பட்டுள்ள உடல் ரீதியான பிரச்சனையை மிக எளிதாக சரி செய்து விடலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில், தற்பொழுது அஜித்துக்கு செய்யப்படும் சர்ஜரிக்கு பின்பு அஜித் சில காலம் ஓய்வில் இருக்க வேண்டும் என்பதால் எத்தனை நாட்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும், மேலும் தொடர்ந்து எத்தனை நாட்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற வேண்டும் என்பது முழுக்க மருத்துவர்கள் ஆலோசனை படிதான் இனி அஜித்தின் நடவடிக்கைள் இருக்கும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் தற்பொழுது அஜித் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு சில காலம் தள்ளிவைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது, இந்நிலையில் அஜித் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் அஜித் விரைவில் குமானாகி வர வேண்டும் என பிராத்தனை செய்து வரும் நிலையில், நீங்களும் உங்கள் பிராத்தனையை கமெண்ட் செய்யுங்கள்.