ஏவி எம்மின் பெருமைமிகு படத்தை இயக்கிய இயக்குனர்… வாசலிலே உயிரிழந்த சோகம்!

0
Follow on Google News

ஏவிஎம் நிறுவனத்தின் 150 ஆவது படமாக உருவான படம்தான் மாநகரக் காவல். ஏவிஎம் நிறுவனத்துக்கு ரஜினி, கமல் போல அதிக எண்ணிக்கையில் படம் நடித்தது இல்லை. ஆனால் அந்த நிறுவனத்தின் 150 ஆவது படமாக உருவான மாநகரக் காவல் படத்தில் நடித்தார்.

அந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் எம் தியாகராஜன். இவர் இயக்குனர் மட்டுமல்ல. பல படங்களுக்கு படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அவருக்கு சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் ஆள் அட்ரஸ் இல்லாமல் போனார்.

இந்நிலையில் இன்று காலை ஏவிமெ நிறுவனம் இருக்கும் தெருவில் அந்த நிறுவனத்துக்கு எதிரேயே உயிரிழந்த நிலையில் அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரின் மரணச்செய்தி திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.