சிறகடிக்க ஆசை ரோகிணி மொத்த பித்தலாட்டமும் முடிவுக்கு வருகிறது… பாட்டி ஊரில் மீனாவிடம் சிக்கிய ரோகிணி..

0
Follow on Google News

தமிழ் சின்னத்திரையில் அடடே சூப்பர், சீரியலும் சூப்பர், ஜோடியும் டக்கர் என ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக கொண்டாடும் ஒரு தொடர் தான் சிறகடிக்க ஆசை. முத்து-மீனா என்ற புதிய ஜோடி நடிக்க அவர்களை வைத்து ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அழகிய குடும்பம், விறுவிறுப்பான கதைக்களம், ஒரே விஷயத்தை அப்படியே இழுக்காமல் உடனே திருப்பங்கள் இருப்பது, குடும்பம் எவ்வளவு முக்கியம் என்பதை அடிக்கடி கூறுவது என ரசிகர்கள் ரசிக்கும் விஷயங்கள் என சிறகடிக்க ஆசையில் உள்ளது.

இந்த தொடரில் தனது அப்பா பணக்காரர் என்று பொய் சொல்லி நீண்ட நாட்களாக ஏமாற்றி வந்த ரோஹிணி தற்பொழுது இனி பொய் சொல்லி தப்பிக்க முடியாத சூழல் ஏற்ப்பட்டுள்ளது. தற்பொழுது விஜயா ரோகினி இடம் உங்க அப்பாவை வர சொல்லுமா இல்லன்னா உங்க மாமாவையாவது வந்து பார்த்துட்டு போக சொல்லு, அப்பதான் உனக்கு இங்கே ஒரு மரியாதை இருக்கும். நம்ம பொங்கலுக்கு கிராமத்துக்கு போறதுக்கு முன்னாடி அவங்கள வர சொல்லு என்று விஜயா சொல்கிறார்.

இதற்கு ரோகிணி என்ன செய்வது என்று தெரியாமல் தோழி வித்யாவிடம் இது பற்றி புலம்பி கொண்டு இருக்கிறார். இந்த பிரச்சனைக்கு ஒரே வழி இப்போ மலேசியாவுல இருந்து வர மாதிரி ஒரு ஆள் செட் பண்ணனும் என தோழி வித்யா ஐடியா கொடுக்கிறார். கறிக்கடை வைத்திருக்கும் ஒருவரை ரோகிணியும், தோழி வித்யாவும் சென்று சந்திக்கின்றனர். புதுசா வர மணி ரத்னம், கமல்ஹாசன் படத்துல நடிக்க போறீங்க என்று அந்த கறிக்கடைக்காரரிடம் சொல்கிறார் ரோகினி.

அவரிடம் ரோகிணிக்கு மாமாவாக நடிக்கனும் என்று சொல்கிறார். முதலில் மறுக்கும் அவர் பின்னர் ஒத்துக்கொள்கிறார். மீனாவின் தம்பிக்கு தெரிந்த பைனான்சியரிம் ரோகிணியும், வித்யாவும் சென்று வட்டிக்கு ஒரு லட்சம் பணம் வாங்குகின்றனர். இதை மறைந்திருந்து மீனாவின் தம்பி பார்த்துக் கொண்டிருக்கிறார். ரோகிணியின் மீது மீனாவின் தம்பிக்கு சந்தேகம் வந்து விடுகிறது.

இதனை தொடர்ந்து ரோகிணியும், அவரது தோழி வித்யாவும் அந்த கறிக்கடைக்காரரிடம் சென்று பிரேஸ்லேட் துணி ஆகியவற்றை கொடுக்கின்றனர். பிரேஸ்லேட்டை மனோஜின் கையில் போட்டு விட வேண்டும் என வித்யா சொல்கிறார். மலேசியாவில் இருந்து தன் மாமா வருவதாக ரோகிணி, மாமா விஜயாவிடம் சொல்கிறார். விஜயா, அண்ணாமலையிடம் மலேசியாவில் இருந்து ரோகிணியின் மாமா வருவதாக சொல்கிறார்.

ரோகிணியின் அப்பா வராதது குறித்து அண்ணாமலை கேட்க, அவர் பிஸியா இருக்கிறார் என விஜயா சொல்கிறார். அனைவரும் பாட்டி வீட்டுக்கு செல்ல மும்முரமாக கிளம்பிக்கொண்டிருக்கின்றனர். அப்போது மாமா எப்போ வரார் என ரோகிணியிடம் கேட்கின்றனர். அப்போது ரோகிணி மாமா பஸ் ஏறிவிட்டதாக கூறுகிறார். வீட்டில் அனைவரும் அதிர்ச்சியாக ரோகிணியை பார்க்கின்றனர். பின் ரோகிணி எதையோ சொல்லி சமாளிக்கிறார்.

பின் அனைவரும் குடும்பத்துடன் காரில் புறப்பட்டு பாட்டி வீட்டுக்குச் செல்கின்றனர். பொங்கல் விழாவிற்கு குடும்பத்துடன் விஜயா தன்னுடைய மாமியார் வீட்டிற்கு சென்று இருக்கிறார். அங்கே அவருடைய மாமியார் மீனாவை வேலை செய்ய கூடாது என சொல்லிவிட்டு விஜயாவை வேலை வாங்குகிறார். அப்போது விஜயா ரோகிணி ஸ்ருதி மீது பாசமாக இருக்க, மீனா மீதும் பாசமாக இருக்க வேண்டும் என பாட்டி சொல்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க பாட்டி ஊருக்கு அருகே தான் ரோகிணி அம்மா ஊர் இருக்கிறது. அப்போது பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற ரோஹிணியின் மகன் கிரிஷ் ரோகிணியை பார்த்து விடுகிறார். அப்போது அவர் கல்யாணி அத்தை என கூப்பிட மீனா அதை பார்த்துவிடுகிறார், இதனால் மீனாவிடம் கையும் களவுமாக மாட்டிய ரோகிணி மீது மீனாவிற்கு சந்தேகம் வர தொடங்குகிறது, இப்படி அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்த இருக்கிறது சிறகடிக்க ஆசை.