இருவருக்கு கல்தா கொடுத்து மூன்றாவதாக பண முதலையை வளைத்து போட்ட VJ மஹாலக்ஷ்மி… பின்னணி தெரியுமா.?

0
Follow on Google News

VJ மகாலட்சுமி விசுவல் கம்யூனிகேஷன் படித்து முடித்து தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இடம்பெற்றவர். அதன் பின்பு தொடர்ந்து பல தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய வேடங்களில் நடித்து வந்தார். ஆனால் இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்கு முன்பு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக இருந்தபோதே தனக்கென ஒரு ரசிகர் பட்டத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் தொலைக்காட்சி தொடரில் நடித்துக் கொண்டிருந்தபோதே அணில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பின்பு தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார் மகாலட்சுமி. மேலும் திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமி – அணில் தம்பதியினருக்கு ஒரு குழந்தையும் உண்டு.

திருமணம் முடிந்து சில சிறிது காலம் இடைவேளைக்குப் பின்பு மீண்டும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார் மகாலக்ஷ்மி. அப்போது சீரியல் நடிகர் பாஸ்கர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மகாலட்சுமியும் – பாஸ்கரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இதனால் கணவரை பிரிந்த மகாலட்சுமி புதிய காதலன் பாஸ்கர் உடன் குடும்பம் நடத்த தொடங்கியுள்ளார்.

ஆனால் பாஸ்கர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் அவருடைய மனைவி மகளிர் காவல் நிலையத்தில் பாஸ்கர் மற்றும் மகாலட்சுமி இருவர் மீதும் புகார் தெரிவித்து பரபரப்பையும் ஏற்படுத்தினார். அடுத்த சில நாட்களில் மஹாலக்ஷ்மி – பாஸ்கர் விவகாரம் என்னாச்சு என்று தெரியாதபடி அமைதியானது. இந்த நிலையில் பெரும் கோடீஸ்வரர் குடும்பத்தை சேர்ந்த தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் உடன் பழக தொடங்கியுள்ளார் மஹாலக்ஷ்மி.

லிப்ரா ப்ரொடக்ஷன் என்கின்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல படங்களை தயாரித்து தொடர்ந்து பணத்தை சினிமாவில் வீணடித்து வருகின்றவர் பல கோடிக்கு அதிபதியான ரவீந்திரன் சந்திரசேகர். அவருடைய குடும்பத்தினர் நமக்கு இருக்கும் பல கோடி சொத்துக்கு எதற்காக நீ சினிமாவில் பணத்தை வீண் செலவு செய்ய வேண்டும். மேலும் சினிமாவில் முதலீடு செய்து தான் நமக்கு பணம் சம்பாதிக்க வேண்டுமா.? என்கின்ற கோபமும் ரவீந்திரன் சந்திரசேகர் மீது அவர்கள் குடும்பத்தினருக்கு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில்,. ஏற்கனவே அணில், பாஸ்கர் என இருவருக்கு கல்தா கொடுத்த மகாலட்சுமி, பெரும் பண முதலையான ரவீந்திரன் சந்திரசேகரை வளைத்து போட்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். இனி வரும் காலங்களில் கணவர் ரவீந்திரன் சந்திரசேகர் உடன் இணைந்து பல தொலைக்காட்சி சீரியல்களை மஹாலக்ஷ்மி தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சின்ன திரையில், இதற்கு முன்பு இருந்த நடிகை ராதிகா போன்று மிக பெரிய செலிப்ரட்டியாக வலம் வர வேண்டும் என்பது தான் மகாலக்ஷ்மி ஆசையும் கூட,அதனால் சொந்தமாக தயாரிக்கும் சீரியலில் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் அமையும், அதனால் தான் பெரும் கோடீஸ்வரரான ரவீந்திரன் சந்திரசேகரை திருமணம் செய்து கொண்டுள்ளார் மஹாலக்ஷ்மி என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

என் வீட்டு பக்கமே வர கூடாது என விரட்டியடிப்பு… வடிவேலு – சுந்தர் சி இடையில் நடந்தது என்ன தெரியுமா.?